Saturday, January 16, 2010

ஆயிரத்தில் ஒருவன் – The Best


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனிடம் தோல்வியடையும் சோழ அரசு, பாண்டியர்களின் குலதெய்வ சிலையை எடுத்துக்கொண்டு, சோழ இளவரசனையும் பத்திரமாக இன்றைய வியட்நாமிற்கு நாடு கடத்தி விடுகிறாகள். இன்றுவரை அவர்களை தேடி செல்லும் யாரும் திரும்புவதில்லை.இன்றைய மத்திய அரசு, ரீமா சென் தலமையில் ஒரு குழுவை அனுப்பி அந்த சோழர்களை பற்றி தகவல் திரட்ட சொல்கிறது. குழுவுகவில் ஆராய்ச்சிக்கு உதவியாக ஆண்ட்ரியா, கூலியாட்கள் குழுவின் லீடராக கார்த்தி, பாதுகாப்பு படை தளபதியாக அழகம் பெருமாளும் செல்கிறார்கள்.

பல தடைகளுக்கு பின் அங்கு சென்றால், சோழர்கள் இனம் இன்னும் சோழ மண்டலத்திலிருந்து தகவலுக்காக காலம் காலமாக காத்திருக்கின்றனர். ரீமா சென்னும் பழைய பாண்டிய வம்சாவெளியை சார்ந்தவர், சோழர்களை அழிக்க முயல்கிறார், கார்த்தி சோழர்களுக்கு உதவி புரிய இறுதியில் என்னவாகுகிறது என்பது தான் கதை.

கதையின் முதல் காட்சியில் இன்றைய தஞ்சையில் ஒரு தெருக்கூத்து காட்சியுடன் துவங்குகிறது -க்ளாசிக். தமிழ் சினிமாவிற்கு புதுமையான தைரியமான கதாபாத்திரங்களில் இரண்டு பெண்கள். வெற்று உதார்விட்டு எதற்கும் பயப்படும் கதாநாயகன். காடுகளில் பயணம், ஓலைச்சுவடி , ஆபத்துக்கள் அதை கடப்பது என முதல் பாதி சரியான ஜாலி, சுறுசுறு, வேகம்.

நிற்க. அதன்பின் கதை அதன்போக்கில் போகிறது, ஒரு நல்ல திரைக்கதைக்கு அது சரியானதில்லை. முதல் பாதியில் வரும் திரல்லர் காமெடி வகை ஒரு வித மனநிலையை உருவாக்கிவிட்டபின் திடிர் அந்தர் பல்டியாக துரோகம், பகை, அனுமாஷ்ய சக்திகள், அடிமை கொடுமைகள், என சம்பந்தமே இல்லாமல் இன்னொரு திசையில் திரைக்கதை பயணிக்கிறது சாதரண ரசிகனுக்கு இதனால் ஏமாற்றமே மிஞ்சும்.

முதல் காட்சியில் சோழ இளவரசன் தப்பிப்பதையே ஒரு படமாக எடுக்கலாம். சோழர்களை தேடிச் செல்லும் குழு என்பது இன்னொரு வகை படம். மண்ணை தீண்ட துடிக்கும் இனமக்களின் ஏக்கமும் அதன் தொடர்ச்சியான போரும் ஒரு வகை படம், என இந்த திரைக்கதை அழகாக தொடர் சினிமாவாக எடுத்திருக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றாக சொல்ல போய் அது எங்கோ போய்விட்டது.ஆயாசமே மிஞ்சுகிறது.

Child Abuse என்கிற ஒரு விடயத்தை காதல் கொண்டேன் படத்தில் அமைதியாக சொல்ல்விட்டு செல்வது போல், இந்த படத்தில், துரோகம் , போர் கொடுமைகள் , அதிகார மனோபாவத்தின் மோசமான முகத்தையும் அழகாக பதிவு செய்திருக்கிறார்..

போரில் தோற்று அடிமையாக சிக்கிகொள்ளும் பெண்களின் நிலை என்னவென்று பதிவு செய்திருக்கிறார். பாராட்டியே தீர வேண்டும்.

தொழிட்நுட்பம், மேக்கிங் என பல வேலைகளில் தரம் மிளிருகிறது. கேரக்ட்ரைசேஷ்ன் சொல்ல வேண்டிய அவசியமைல்லை அக்மார்க் செல்வா டச். கார்த்தி பருத்திவிரனை நினைவுக்கொள்ள செய்தாலும் இதில் கலாய்த்திருக்கிறார். கார்த்தி மேல் இன்னும் கொஞ்சம் மதிப்பு கூடுகிறது, நல்ல நடிகர்..

பாடல்களை கட் செய்துவிட்டு ஆல்பம் போல் போட்டிருக்க வேண்டும், பாடல்கள் தேவையற்றது, பின்னனி இசை அருமை. இன்னும் கொஞ்சம் திட்டமிட்டிருந்தால் அருமையாக வந்திருக்கும்..

வெகுமக்கள் பார்வையில் படம் சுமார், என பார்வையில் படம் சூப்பர்... இல்லை இல்லை “THE BEST”.

Wednesday, January 13, 2010

ராமர்,ஏசு,அல்லாவின் விலை என்ன? – Operation Green Hunt


கோடிக் கோடியாகச் சம்பாதிக்கும் பணக்காரர்களை நேரில் பார்த்தபோது நொந்து போய்விட்டேன், அவர்களுக்கு நான்கு கைகள்,ஆறு கால்கள், இரண்டு தலைகள் இருக்கும், அதை பராமரிக்கத்தான் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர்களுக்கும் நம்மை போல் இரண்டு கைகள், ஒரு தலை மட்டும் தான் இருந்தது”.

-அமெரிக்க சுற்றுப் பயண கட்டுரை,

மார்க்ஸிம் கார்கி.

தோங்கிரியா கொண்டா – இத்தனை நாள் வரை ஒரிசாவில் வாழும் பழங்குடி மக்களுக்கு கடவுளாக இருந்த இந்த மலையை, இந்திய அரசு பண்ணாட்டு நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. அந்த கடவுளை வாங்கியது இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும் லண்டன் வாழ் இந்தியரின் நிறுவனமான “வேதாந்தா” என்பது இன்னொரு நகைமுரண்.

மற்ற கடவுள்களை போல் வெறும் கல்லாய் இல்லாமல் அந்த பழங்குடிகளின் கடவுள் “பாக்ஸைட்” எனும் தாது பொருளாய் இருந்தது தான் பிரச்சனை.நல்ல விலைக்கு போய்விட்டார். ஆனால் மக்களோ கடவுளை மட்டுமல்ல தங்கள் ஆதர இருப்பிடத்தையும் தக்க வைக்க களத்தில் குதித்தனர், விளைவு – காலை பத்திரிக்கைகளையோ அல்லது செய்திகளையோ பார்த்தால் தெரியும் “ரெட் டெரரிஸ்ட்டுகள் (சிவப்பு தீவிரவாதிகள்,மாவொயிஸ்ட்டுகள்,நக்ஸலைட்டுகள்)” என்று புனைபெயரை சம்பாதித்துள்ளனர்.

ஒரு வழியாக பாகிஸ்தானை கட்டுபடுத்தியாகிவிட்டது, எடுத்த ராணுவ வீரர்களுக்கும், வாங்கி வைத்திருக்கும் வெடிகுண்டுகளுக்கும் வேலை வேண்டுமே? அதற்கு கொத்தாக தீவிரவாதிகள் வேண்டும், பார்த்தார்கள் பழங்குடி மக்களை ’மாவோயிஸ்டுகள்’ என கூறி அவர்களுடன் போர் புரிய தொடங்கிவிட்டது இந்திய அரசு.

ஆனால் பழங்குடிகள் விடுவதாக இல்லை, “இழப்பதற்கு இனி என்ன இருக்கிறது உயிரை தவிர” என களத்தில், ’எங்கள் கடவுளை விலை பேசும் நீங்கள் ராமர், ஏசு அல்லாவின் விலை என்ன வென்று கூறுங்கள்’ என்ற கேள்வியுடன் இறங்கிவிட்டனர். சரிதானே?நாளை திருப்பதிமலை முழுவதும் கிரனைட் என்று விற்றால் சும்மா இருப்பீர்களா?

இந்தியா என்பதெ அமெரிக்காவின் 51வது மாகாணம் தானே. உடனே அமெரிக்க வழியிலேயே, அவர்கள் பனிபோர் காலத்தில் வைத்த கோஷமான “Instead RED be DEAD” என்று இந்தியாவும் சிவப்பு தீவிரவாத்தை நசுக்க கிளம்பிவிட்டது.

தீவிரவாதத்தை நசுக்கும் பணியென்றால் , எத்தனை கற்பழிப்புக்கள், மார்பறுப்புகள், பிறப்புறுப்பின் மீதான அடிகள்.. ஒரு எட்டு “சோளக்கர் தொட்டி” நாவலை வாசித்துவிடுங்கள்.ஆனால் அவர்கள் நேற்று வந்த இந்தியாவிற்கு முன்பே வந்த பூர்வகுடிகளாயிற்றே “IF NOT RED be DEAD” என்று தைரியமாக வல்லரசின் ராணுவத்தை எதிர்த்து நிற்கிறார்கள்.



வேறு என்ன செய்ய? தங்கள் உரிமைகள, உடமைகளை கொடுத்துவிட்டு அப்பாவி என உலக மக்கள் சுற்றுலா வரும் தலமாக தங்கள் முகம்களை அமைப்பதைவிட,பேடியாக எங்கோ சோற்றுக்கு பிச்சையெடுபதை விட, போராடுவடு தப்பில்லை…



ஏன்? அமைதியாக அரசு கொடுக்கும் விலையை வாங்கிக்கொண்டு போகலாமே , ஏன் சாகவேண்டும் என்று கேட்கும் ’சாம்பர் சாதங்களுக்கு”, ஒரு வேலை அவர்கள் அந்த மலையை விட்டு செல்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும்,

  1. அவர்களுக்கான் நஷ்ட ஈடு அரசிடமிருந்து நேர்மையாகவும், முழுமையாகவும் வந்து சேருமா?
  2. சேர்ந்தாலும் இத்தனை நாள் மலையை சார்ந்து வாழ்ந்த அவர்களால் வேறு என்ன வேலை செய்ய முடியும்?
  3. அப்படியே என்றாலும், அவர்களால் கல்வி, வேலை வாய்பில் நகர மக்களுடன் போட்டி போட முடியுமா?
  4. அவர்களுக்கு இடஒடுக்கிடு கொடுப்பீர்களா?
  5. இருப்பிடமாக எங்கே செல்வார்கள், மாநாகரங்களில் ஒரு புது சேரியிலா?
  6. அவர்களின் மறுவாழ்விற்கான அரசின் திட்டம் என்ன?

சரி அப்படியே என்றாலும்,

  1. உலகமே மாசடைந்து, உலக வெப்பம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் இயற்கையை அழிக்கும் திட்டமும், அங்கு ராணுவம் அழித்திருக்கும் காடுகளின் நிலையும் இப்பொழுது இந்தியாவிற்கு அவசியமா?
  2. இதனால் இந்தியா அரசுக்கு எவ்வளவு லாபம் வரும், அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு லாபம் வரும்?
  3. சுவிஸ் வங்கியில் பதுங்கியிருக்கும் பணத்தைவிடாவா இந்த திட்டம் இந்தியவிற்கு லாபம் தர போகிறது?
  4. நதி நீர் இணைப்பால் ஏற்படும் இயற்கை எதிர் விளைவுகளை தொலைநோக்குடன் பார்க்கும் ராகுல் காந்திக்கு இந்த திட்டதின் மோசமான விளைவுகள் தெரியவில்லையா?

ஆம் அந்த மக்கள் துப்பாக்கியை தூக்கிவிட்டனர், ஆனால் அவர்களின் ஆயுதத்தை தீர்மானித்தது இந்திய அரசு தானே?

வெள்ளைகாரனிடமிருந்து நாட்டை காப்பாற்றினோம் என்று பெருமைக்கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் இப்பொழுது வெள்ளையினிடமே நாட்டை விற்கும் அவலத்தை என்னவென்று சொல்ல?

ஒரு லேசான கணக்கில் இதுவரை ஆர் எஸ் எஸும், பஜரங்கதளும் கொன்றவர்களை விட மாவொயிஸ்ட்டுகள் குறைவாகவே கொன்றிருக்கிறார்கள், அவர்கள் மீது மட்டும் ராணுவம் பாய்கிறது..

பயங்கரம் என்பதற்கு ‘பயங்கரமான காடு’, காட்டுவாசிகள் காட்டுமிராண்டிகள், என்றெல்லாம் சொல்லுகிறோம், அவர்களையே வேட்டையாடும் நம்மை என்னவென்று அழைத்துகொள்வது?



அருந்ததி ராய் தி கார்டியன் பத்திரிக்கையில் எழுதிய “தாக்குதலுக்குள்ளாகும் இந்தியாவின் இதயம்” என்ற கட்டுரையை தழுவி என கருத்துக்கள்..

Tuesday, January 12, 2010

மொக்கை பதிவர்கள் Vs சரித்திரப் பதிவர்கள், சைடில் கொஞ்சம் ஊறுகாய்கள்.

”முன்பு சரித்திரம் வெற்றிப் பெற்றவர்களால் எழுதப்பட்டது, இப்பொழுது சரித்திரம் சாமானியர்களால் எழுதப்படுகிறது – இணையப் பதிவுகள்.”

அலுவலகத்தில் தொடர்ச்சியான இணையக் கட்டுப்பாடுகளால் முன்பு போல் பதிவுலகத்தில் உலவ முடியவில்லை. எப்பொழுதாவது படிப்பது தான். அது போல் நேற்று பதிவுலகில் நுழைந்தால், அனைத்துலகத் தமிழ் பதிவர்கள் மத்தியில் யாருடையது மொக்கை பதிவு எனும் அதிபயங்கர யுத்தம் நடந்துக்கொண்டிருந்தது?..

இணையப் பதிவர்களிடம் ஒரு தவறான மனோபாவம் உள்ளது, இணையத்தில் எழுதி

சில பின்னூட்டங்களும், கொஞ்சம் ஹிட்களும் வந்தவுடன் அவர்களுக்கு சில அடிப்படை குணங்கள் வந்துவிடுகின்றன அவை,

  1. நான் ஒரு சுஜாதா.
  2. நான் ஒரு மிஸ்டர் பர்ஃபெக்ட்.
  3. நான்கு பேருக்கு புத்தி சொல்ல வேண்டும்,
  4. அனைத்தையும் விமர்சிக்க வேண்டும்.
  5. ஆருடங்கள் சொல்ல வேண்டும்..
  6. ”நான் அந்த காலத்தில்”, ”எனக்கெல்லாம்” என்று சுயப்புராணம் பாட வேண்டும்.
  7. சேகுவாரவிற்கு அடுத்து தோன்றியுள்ள ஒரே புரட்சியாளன் நான் தான்.
  8. தன்னை தவிர அனைவரும் தவறாக உள்ளனர்..

இந்த அடிப்படை மனோபாவம், எழுத தொடங்கி சில நாட்களில் அனைவருக்கும் வருவதை பார்த்துக்கொண்டடுத் தான் இருக்கிறோம்..(வந்துட்டாருய்யா நாட்டாம சொம்ப தூக்கிக்கிட்டு..)..

பதிவுகள் ஏன் செய்கிறோம்? குறிப்பாக எந்த காரணமுமில்லை. எழுத ஒரு வெளி, ஒரு களம், இதோ பார் நானும் எழுத முயற்சிக்கிறேன், எழுதுகிறேன்.. நல்லாயிருக்கா? அவ்வளவுதான்..

சிலருக்கு நன்றாக எழுத வரும்,சிலருக்கு எழுதுவது தொழிலாக இருக்கும், சிலருக்கு கொஞ்சம் தட்டும், ஆனால் ஒரே வேலையை தொடர்ந்து செய்யும் போது ஒரு நாள் அதில் உன்னதம் வருவது நிச்சயம்..சரி உன்னதம் வந்து, ஒண்ணுமில்லை அவரவருக்கு பிடித்த வேலையை செய்ய போகிறோம்.. இங்கு யாருடைய உணவும் இன்னொருவரின் வயிற்றிலில்லை..

போகிறப் போக்கில் கொஞ்சம் மொக்கை, கொஞ்சம் பகடி, கொஞ்சம் தகவல் நம் பரிமானம்- பதிவுகள் அவ்வளவுதான், அதிகபட்சமாக ‘என் பார்வையில்’.. அதுக்கு மேல் என்ன இருக்கிறது?

இன்னொரு பக்கம் இந்த சச்சரவுகளின் கோபமான பின்னூட்டங்கள் பின்னல் இருக்கும் அடிப்படை மனநிலை கோபத்திற்கான அதே மனநிலை தான்..

ஒருவர் மீது, ஒரு நேரத்தில் வரும் கோபமானது அந்த நொடியுனடைய, அந்த செய்கையுனுடைய,அந்த சூழ்நிலையினுடையது மட்டுமில்லை, மனதில் தேங்கி கிடந்த கோபம், சிறிது சிறிதாக சேர்ந்து ஒரு நாள் கட்டுபடுத்த முடியாமல் வெடிக்கிறது..

இந்த பின்னூட்டங்களை பார்க்கும் போதும் அது தான் தெரிகிறது , ’எப்ப சிக்குவான்,.. இதோ சிக்கிட்டான்”…”ரொம்ப நாளா பாக்கிறேன், மவனே ஓவரா போயினுக்கிற’.. ரகம் தான்.. நீங்கள் இதை செய்தீர்கள், வடை சுட்டீர்கள், தனிமனித தாக்குதல் என்பதெல்லாம், சால்ஜாப்பு..

பதிவுலகில் ஒரு நட்பு வட்டம் அமையும், நண்பர்கள் அவர்களுக்குள் மற்றவர் மனம் புண் படாதபடி, மொக்கைகளை ’நல்ல பதிவு’ என்பார்கள், உண்மையகவே நன்றாக இருந்தால், நம்மை அழைத்து பாராட்டுவதோ, மின்னஞ்சல் அனுப்பவதோ ஏன் பின்னூட்டத்தை பார்த்தாலே தெரியும்.. வருத்தம் என்றால் நிச்சயம் சபையில் வைக்காமல் தனியாக அழைத்து சொல்லலாம் கண்டிக்கலாம், ஒரு குத்துக்குட விடலாம்..இதை சீரியஸாக எடுத்துக்கொண்டால் எப்படி?

லக்கியின் பதிவிற்கு ’ஓ’ போட்டவர்கள், கேபிளின் பதிவில் ’வருத்தம்’ தெரிவிக்கிறார்கள்.. ’ஓ’ லக்கிக்காக, ’வருத்தம்’ கேபிளுக்காக.. சிம்பிள்..

நான்கு பேர் உங்களை பாரட்டுகிறார்களா, அப்பொழுது நான்கு பேர் உங்களை திட்டுவார்கள் இது தான் சமநிலை, இயற்கை அவ்வளவுதான்.. பாரட்டின்போது சந்தோஷப்பட்டால், திட்டும் போது வருத்தப்

படதான் வேண்டும், திட்டுகளை சாதரணமாக எடுத்துக்கொண்டால் பாராட்டுக்களையும் சாதரணமாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..

சரி சரி கடைசியாக அடிச்சிக்குங்க நல்ல அடிச்சிக்குங்க யார் வேணும்ன்னா அடிச்சிகுங்க ஆனா ரத்தம் வர அடிசிக்குங்க.. சும்மா வாயிலேயே வட சுடாதீங்க..

டிஸ்கி: மொக்கை பதிவர்கள் சரி, சரித்திர பதிவர்கள் சரி.. என்ன மாதிரி ஊறுகாய் பதிவர்களை விட்டுட்டா எப்படி? வன்மையாக கண்டிக்கிறேன்…

Saturday, January 2, 2010

புத்தகம்: வன்முறை, திரைப்படம் பாலுறவு- அறவியலும், அழகியலும்


உயிர்மையில் வாங்கிய Image and Impressionனின் வெளியீடான யமுனா ராஜேந்திரன் எழுதிய வன்முறை, திரைப்படம் பாலுறவு- அறவியலும், அழகியலும் புத்தகம் பற்றி என் எண்ணங்கள்...

சினிமாவை நேசிப்பவர்களும் சரி மாற்று சினிமாவின் ரசிகர்களும் முன் வைக்கும் ஒரு முறை அல்லது அவர்கள் சினிமாவை அனுகும் முறை மூன்று விடயங்களை சேர்த்தது,

  1. சினிமவை பார்க்க வேண்டும்,
  2. சினிமவை பற்றி படிக்க வேண்டும்,
  3. சினிமவை பற்றி பேச வேண்டும். இதில் சினிமாவை பார்பது சரி.

சினிமாவை பற்றி படிப்பது என்று கொண்டால் தமிழில் உள்ள புத்த்கங்கள்? நடிகைகளின் கவர்ச்சி படங்களையும், அந்த மூன்று எழுத்து நடிகையின் நான்கெழுத்து காதலர் என்கிற ரீதியில் வரும் உதவாத ட்ரிவியாக்கள்.இதை மீறி சினிமாவை பற்றி படிக்க என்று பார்த்தால் சிலர் உண்மையாகவே குறைவாக எழுதியிருக்கிறார்கள், தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

எனக்கு தெரிந்து நிழல் பதிப்பகம், கனவுபட்டறை என சில பதிப்பகங்கள் சீரியசாகவே சினிமாவை மையபடுத்தி புத்தகங்கள் தந்துள்ளன. உயிர்மையில் சாரு நிவேதிதா, எஸ் ராமகிருஷ்ணன், யமுனா ராஜேந்திரன் போன்றோரின் கட்டுரைகளும். அசோகமித்திரன் ஆரம்பித்து பல விமர்சகர்களின் கட்டுரைகள் என்று பார்த்தால் அவையெல்லாம் விமர்சன ரீதியாக இருக்கிறதே ஒழிய ப்ரொபஷ்னலிஸம் குறைவு..

அந்த வரிசையில் தமிழ் சினிமாவை அலசி ஆராய்ந்திருக்கும் இந்த புத்தகம் அதீத கவனம் பெருகிறது.புத்தகம் தமிழ் சினிமாவின் சில படங்களை மையப்படுத்தி பொதுவான தமிழ் சினிமாவின் சூழலை ஆராய்கிறது.

குறிப்பாக தமிழ் சினிமா முன்வைக்கும் வன்முறைகளை பிரித்து ஆராய்கிறார்,அரசு வன்முறை (காக்க காக்க), சாதீய வன்முறை(விருமாண்டி, தேவர்மகன்),சமுக வன்முறை (பிதாமகன்), தனிமனித வன்முறை (ஆளவந்தான்),அரசியல் வன்முறை (நந்தா).

தமிழ் சினிமா ஆபாசத்தை அழகியலுடன் காட்டுவதும் அதை குழந்தை முதல் குடும்பம் வரை ரசிப்பதும். தணிக்கை துறை, படைப்பாளியின் சுதந்திரம். என சகல பரிமானங்களையும் முன் வைக்கிறது.

பழைய படங்களில் கடைசி நேரத்தில் வில்லன் திருந்துவது போலவோ அல்லது க்ளைமாக்ஸில் வரும் போலீஸிடம் ஒப்படைக்கப்படுவதோ, இப்பொழுது நகைப்புக்குள்ளாகிவிட்டு ஆனால் வில்லன் அடித்து கொல்லபடுவது ரசிக்கபடுகிறது. ஒருவிதமாக ரத்தத்தை பீறிட வைத்து காமர லென்ஸை சிவப்பாக்குவது பின்நவினத்தும் என்று குழப்பிகொள்வது வரை அனைத்துமே கவனிக்கபட வேண்டியதாகிறது.

தமிழ் சினிமாவை பற்றிய விவாதங்களை முன் வைக்கும் இந்த புத்தகத்தை தமிழ் சினிமாக்காரர்கள் படிப்பது மிக முக்கியம் என்றே படுகிறது. சினிமாவை பற்றி படிக்க நினைக்கிறவர்களுக்கு படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.விலை அறுபது ரூபாய்.

Friday, January 1, 2010

சென்னை புத்தக பூங்காவில் வாங்கிய புத்தகங்கள்.

இன்று ஒரு மூன்று மணி நேரம் சென்னையில் இருக்க வேண்டி வந்ததால், சரி புத்தக பூங்கவிற்கு செல்லலாம் என முடிவு செய்து பச்சையப்பாஸ் ஏறிவிட்டேன்.

வழக்கம் போல அதே திடல், மூத்திர வாசனையுடன் கழிவறை. கேண்டின் சுமார். இந்த முறை நிறைய ஸ்டால்கள், குறைவான புத்தகங்கள். நாலு ரவுண்ட் நடப்பதை தவிற்கலாம், ஒரே நிறுவனமே நான்கு ஸ்டால்கள் போட்டுள்ளனர். ஒரே புத்தகம் குறைந்தது 10 ஸ்டால்களில் கிடைக்கிறது. புத்த்கம தான் ம்ச்..


சாரு மஜும்தார் பற்றிய எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இன்று அண்ணன் பைத்தியக்காரன், நர்சிம், தமிழ்ஸ்டுடியோ அருண், குணா, கவிஞர் விக்ரமாதித்தியன் அய்யா, மஃபாய் பாண்டியராஜன், கிழக்கு பதிப்பகம் பத்ரி இவர்களையெல்லம சந்தித்தேன்.

வழக்கமாக சென்ற புத்தக கண்காட்சிகளில் ஆயிரக்கணக்கில் செலவாகும், கடந்த ஆண்டிலிருந்து அது நூறுகளாக குறைந்துவிட்டன. இந்த ஆண்டு 900 ரூபாய் ஆனது.

வாங்கிய புத்தகங்கள்,

1. விடியல் பதிப்பகம் - ஆக்ஸ்ட் 15 இன்ப நாள் துக்க நாள்.
2. கிழக்கு பதிப்பகம் - மாவோயிஸ்ட், ராஜிவ் கொலை வழக்கு விசரணை.
3. பாரதி புத்தகாலயம் - இ எம் எஸ், இந்தியவை பற்றி காரல் மார்க்ஸ்,தெலுங்கான, உலகமயமாக்கள் போல் சிறு சிறு புத்தகங்கள் 10.
4. தமிழினி – காடு, நீட்ஷே, காந்தி பற்றி ஜெயமோஹன் (வாங்க வேண்டியவை).
5. அறிவாலயம் –நீதி தேவனின் மயக்கம், நெருக்கடி நெருப்பு, செம்மொழி.
6. ஞானபாநு - ’?’
7. ஏழு தலைமுறை நாவல், ஓரான் பமுக்கின் மை ரெட் டாக் (அடையாளம்),
8. உயிர்மையில் – யமுன ராஜேந்திரனின் ஒரு புத்தகம், திரைக்கதை எழுதுவது எப்படி? சுஜாதா.

இன்னொரு முறை நேரம் கிடைத்தால் போகலாம் என இருக்கிறேன், விக்ரமாதித்தியனின் கவிதை தொகுப்பை வாங்க... நிழலின் இங்மர் பெர்க்மென், இரான் சினிமா வாங்க.


குறிப்பு: பெரியாரின் சிந்த்னைகளை 9000 பக்கங்கள் தொகுத்து வே ஆனைமுத்து அவர்கள் பிப்ரவரியில் 20 தொகுதிகளாக வெளியிடவுள்ளார். விலை 5800. சலுகை விலை 3800. புத்த்க கண்காட்சியிலேயே பதிவு செய்யலாம். பெரியாரை தெரிந்துக்கொள்ள விரும்புவோருக்கு ஒரு நல்ல புத்தகம்.

Wednesday, December 30, 2009

சாஃப்ட்வேர் இஞ்சினியரின் ஒரு நாள்

சாஃப்ட்வேர் இஞ்சினியரின் ஒரு நாள்

http://koodu.thamizhstudio.com/oon_software_281209.php

Sunday, December 27, 2009

கலைஞர் டிவி:நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி இன்னொரு மானாட மார்பட ச்சீ மயிலாட

குறும்படங்கள், திரைப்படங்களின் மாற்றாக கருதப்படுகிறாது. இலக்கிய உலகில் சிறு பத்திரிக்கைகள் போல்; திரை உலகத்திற்கு குறும்படங்கள். ஆனால், இன்றைய குறும்படப் படைபாளிகளின் வறட்சி, வளர்ந்து வரும் குறும்பட உலகை கோலிவுட்டிற்கு மாற்றாக மாற்றி வருகிறார்கள். ’கோலிவுட்’ கேலிகளாகிக் கொண்டிருக்கும் கலைஞர் தொலைக்காட்ச்சி குறும்படங்கள்.

கலைஞர் தொலைக்காடசியில் ‘நாளைய இயக்குனர்’ என்னும் நிகைழ்ச்சி, குறும்பட உலகின் வளார்ச்சியை வேகப்படுத்தும் என்று பார்த்தால், அந்த உலகை மாசுபடுத்திவிடுமோ என்ற பயம் தான் வருகிறது.

தமிழ் திரைப்படங்கள் அழிந்துக்கொண்டிருக்க முக்கிய காரணமான மாற்று சிந்தனைகள் இல்லாமை, ஒரே கருத்து சூழல், காதல், கற்பனையற்ற அதே காட்சிகள், ஹீரோயிசம், பாடல்கள், க்ளிஷேக்கள் என்பதை புரிந்துக்கொள்ளாமல், மீண்டும் மிக நல்ல குறும்படம் என்பது இவை அனைத்தையும் ஒட்டியே நிகழ்ச்சியில் வருகிறது.

”நான் குறும்படம் எடுக்க வேண்டும் என ஒரு முக்கிய பிரபலத்திடம்(சினிமா அறிவுஜீவி) சொன்னபோது”,

“போய் முதலில் உலகில் சிறந்த குறும்படங்களை பார், தமிழில் குறும்படங்களை பார்த்தால் ’அட நாமும் இஸியா படமெடுக்காலாம்’ என்று நினைக்க தான் தோன்றும். குப்பையை எடுக்காதே” என்று கூறிவிட்டார்.

இது தான் தமிழ் குறும்பட உலகின் சூழல். இதை மதனும், பிரதாப் போத்தனும் ஜட்ஜாகி ஊக்கவித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சீப் கெஸ்ட் வேறு! வளரும் படைப்பாளிகளுக்கு அறிவுறைகள் கொடுக்கபட வேண்டும், தவறுகள் சுட்டிக்காட்டபட வேண்டும். அதை செய்ய தவறுகிறார்கள்.

குறும்படங்கள், மீண்டும் மீண்டும் ஒரு மெசேஜ் சொல்லிவிட வேண்டும், கண்டிப்பாக ஈழத்தை பற்றி ஓரு படம், அமேச்சுர் தனமான நடிப்பு, க்ளிஷேக்கள், படம் முடிய கடைசியில் கட்டை வாய்ஸில் ஒரு மெசேஜ். ரொம்ப கஷ்ட்டம். குறும்படங்கள் என்றாலே என் நினைவுக்கு வருவது, எடுத்து முடியாத சிறுகதைகளும், குறுங்கதைகளும் தான்?

க்ளிஷேக்கள் சில நேரங்களில் குறும்படங்களில் தவிர்க்க முடியாதது அதனால் அதை பற்றி அதிகம் குறை சொல்ல முடியாது.

ஈழம் சார்ந்த படங்களை பற்றி பார்த்தால், ஆஸ்கர் விருதை பாருங்கள் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் ஜெர்மெனியின் யூதக் கொலைகளை (இராண்டாம் உலக போர்) மைய்யப்படுத்தும் ஒரு படத்திற்கு ஆஸ்கர் வழங்கபடும். காரணம் அந்த பிரச்சனையை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டால் தான் உலக அரங்கில் இஸ்ரெல் ஆக்கிரமிப்பை நியாபடுத்த முடியும் , அது போல் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஈழ பிரச்சனை மீடியாவில் வரவேண்டியது அவசியம் தான். ஆனால், நிச்சயம் இப்படி குப்பையாக இல்லை.

இன்று பார்த்த படங்களில் ஈழத்தை பற்றி படமிருந்தது, வெற்றி பெறவில்லை. ’அட போங்கப்பா’ என்று ரசிகர்கள் சொல்லிவிடுவார்களோ என பயந்து, வேறு படத்திற்க்கு வெற்றியை தாரை வார்த்தகளோ என்று எண்ணத் தோன்றியது. ஆனால், வந்த படங்களிலேயே ஈழத்தை மையபடுத்திய அந்த படம் தான் கொஞ்சம் தேறியது.