Tuesday, July 7, 2009

சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நித்தியானந்த பகவான் ஜெகட்குரு ஜட்டி மார்க்ஸானந்தாவின் லீலைகள்

மரங்களின் நடுவே அமைதியான சூழலில் அந்த ஆசிரமம் அமைந்திருந்தது.ஆசிரமத்தில் மகா சுத்தம், ஆச்சாரம் பார்ப்பார்கள், மற்ற ஆசிரமங்களை விட நிச்சயம் இது வித்தியாசமான ஆசிரமம்.மற்ற ஆசிரமங்களில் உள்ளே நூழையும் போது செருப்பை கைட்டிவிட்டு வர சொல்லுவார்கள் ஆனால் இங்கு செருப்பு மட்டுமல்ல துணியையும் கழட்டி விட்டு வர சொல்லுவார்கள்.அப்படியே துணி இருந்தாலும் ஆசிரமத்தை விட்டு வரும் போது நிச்சயம் கோமனம் உருவி அனுபினால் நீங்கள் சந்தோஷம் பட்டுகொள்ளலாம், ஏனென்றால் பொதுவாக அவர்கள் உருவுவது கிட்னியை.

ஆசைபடதே என்று சொல்லும் சாமியர்களின் நடுவில் அத்தனைக்கும் ஆசைபடு என்று சொன்னவர் நம்ம சாமியார். இவரை போலி சாமியார் என்று நீங்கள் கூறினாலும் அவர் புன்முறுவலுடன் உங்களூக்கு ஒரு குத்தாட்டம் போட்டு ஆசிர்வாதம் செய்வார்.அவருக்கு வயது எப்படியும் 1500 வருடங்கள், 1600 என்று பக்த கோடிகள் சொன்னாலும் அவரின் உத்தம காரியதரிசியோ புன் முறுவலுடன் சொல்வது இவர் இமயமலையில் உள்ள பாபாவுக்கே பால் கொடுத்தவர் என்று..அப்ப எப்படியும் 2000 வருடங்களுக்கு மேல்....

ஆசிரமத்தில் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து மோட்சம் பெற தயாராக வேண்டும்.இங்கு வரும் பக்தர்கள் எந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்கள் என்று உங்களுக்கு சொன்னால் தெரியாது அதை புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை..ஒரு நிமிடம்

’ஓம் கிரீம் ஐஸ்கீரிம்,சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நித்யானந்த பகவான் ஜெகத்குரு ஜட்டியே நம்ஹா..’ இது தான் சுவாமியை அடைய மந்திரம்...

உங்களுக்கு கொஞ்சம் புராணம் சொல்லுகிறேன், ஆழ்வார்கள், நாயன்மார்கள் சதா சர்வ காலமும் கடவுளை நினைத்து பல ஜென்மங்கள் எடுத்து கிடைத்த மோட்சத்தை (திரையரங்கையல்ல), முக்தியை நம்ம குரு வெறும் 2500 ரூபாய் பணத்தாலும் சில மணிநேரம் பூஜையிலும் கொடுத்துவிடுவார்..

ஏதோ கடைக்கு சென்று மிக்சர் வாங்குவது போல் இங்கு வந்து மோட்சத்தை வாங்கி போனவர்கள் ஆயிரமாயிரம் .. ஆனால் ஒரு விஷயம் யாரும் சுவாமிஜி முன்னால் அல்லது நேருக்கு நேரோ உட்கார கூடாது.. நாட்டின் பிரதமரே சுமாஜியின் காலடியில் வாய் மேல் கைவைத்து உட்கார்ந்த காட்சியை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்தவர்கள் பலர்.

இந்த சாமியார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானல், சுவாமிஜி சாதராண மானிட பிறவியாக தான் அவதரித்தார், அப்படி ஒரு நால் காலட நடந்து சென்ற போது, ஒரு தெய்வீக குரல், அட நம்ம பாபா.

‘என்ன உன் கடமையை செய்யாமல் சுற்றிகொண்டிருக்கிறாய்’

என்று கேட்கவே அவரின் முன் ஜன்மம் நினைவுக்கு வந்தது. அவர் இதே பாபாவால் முக்தியை பெற்றவர் அதை அனைவருக்கும் அளிக்கவே இவர் அவதரித்திருக்கிறார் என்ற உண்மையை பாபாவே நேரில் வந்து நியாபக படுத்தவே சுமார் 1500 வருடஙக்ளுக்கு முன் இந்த ஆசிரமத்தை வெறும் 2 தங்க காசுகள் (அப்பொது 100 ரூபாய்) முதலீட்டில் தொடங்கினார் இன்று வளர்ந்து உலகம் முழுக்க கிளைகள் பரப்பி கோடிகணக்கில் பணம் கொண்ட ஆசிரமமாக வளர்ந்திருக்கிறது

அதன் பின் சுவாமி தன் இயற்பெயரை மாற்றி சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பகவான் ஜெகத்குரு ஜட்டி தேவ் பாபா சிஷ்யானந்தா என மாற்றிகொண்டார். இவர் முதல் நோக்கமே மக்களுக்கு எப்படி வாழுவது என கற்று கொடுப்பது தான் குறிப்பாக இளம் பெண்களுக்கு...
இவர் பேசாதவர்களை பேச வைக்கும் சாதரண சாமி இல்லை பேசுபவர்களை பேசாமல் செய்யும் அசாத’ரண’ குரு. வாயில் இருந்து லிங்கம் எடுபதில்லை, புல் போதையில் ஒருமுறை வாந்தியெடுத்தார் என்பது வேறு விசயம் என்றாலும் இவர் தன் முழு சக்தியையும் உபயோகித்து வாயிலிருந்து சின்ன பாலாடையில் ஆரம்பித்து மக்களுக்கு உபயோகம் கொடுக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வரை எடுத்து கொடுத்திருக்கிறார்..

ஒரு முறை ஒரு சிஷ்யர், ”சுவாமி, நான் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?” என் கேட்டபோது..

“எப்போதும் சந்தோஷமாகவே இரு” என்று சொன்னதும் இப்படி சாமியார் ஜென், சூபி தத்துவத்தை துப்பிய அந்த நொடியை நினைத்த மாத்திரத்தில் அந்த பக்தர் சுவமிஜியிடமே சென்று சேர்ந்தார்.

ஏழைகள் இருக்கும் வரை தான் பணக்காரன் என்பவன் தனித்து தெரிவான் அதனால் சம உலகம் ஏற்பட அனைவரும் பணகாரர்கள ஆக வேண்டும் என சொல்ல பல கம்யூனிஸ்ட் தொண்டர்களே சோஷலிசம் பேசிய நவின மார்க்ஸ் இவர், என ஆசிரமத்தில் சேர இவருக்கு ’மார்கஸானந்த’ எனும் இன்னொரு பெயரும் உள்ளது.

இவர் நமகருளியிருக்கும் நவின யோகவும், தியானமும் மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து முக்தி பெற இவரது உழைப்பும், தொண்டும் கொண்டு இவர் இன்னொரு 2000 ஆண்டுகள் வாழ்ந்து நம் சந்ததியினருக்கும் உதவ வேண்டும் என பக்தர்கள் நினைதிருந்த நேரத்தில் அவர் செய்த கொலைகளுக்கு (இது மூடர்களின் பாஷையில்) அவர் பாஷையில் கொடுத்த முக்திகளுக்காக அவரை போலிஸ் கைது செய்தது..

சுவாமிக்கு இந்த உலகமே ஒரு வீடுதான் அவருக்கு எல்லாம் சமம். சுகம்-துக்கம், ஆசிரமம் ஜெயில்,ஆனால் அவ்ரை இப்படி கைது செய்ததை விட அவர் ஜெயிலுக்கு பூஜைகள் செய்ய தீர்தத்தை எடுத்து செல்ல கூடாது என சொல்லிய பொது தான் அவ்ருக்கு இந்த உலகம் அழிவை நோக்கி போய் கொண்டிருப்பது ஞானகண்ணுக்கு தெரிந்தது..

அந்த தீர்தம் செய்யும் முறையே அலாதியானது.. உலகின் மூன்று பாகங்களை சூழ்ந்துள்ள கடலின் உதவியுடன் கிடைக்கும் அமுதம் அது.. ஒரு புனிதமான கடற்கரையில் ப்ல பூஜைகள் செய்து அக்னிபகவான் துணையுடன் ஒரு பானையில் நிறைய தன்ணிர் ஊற்றபட்டு போடபடும் அண்ணம் (அண்னபூரினியை வழிபட்டு) ஒரு பத்தடி குழிக்குள் புதைக்கபட்டு இரண்டு மண்டல காலங்கள் (ஒரு மண்டலம் 48 நாட்கள்) பின் எடுக்கபட்ட போது ஒரு வித வாசனை வந்தாலும் அது தேவபானம், புனித தீர்தம். அதை சாமி தேர்ந்த சிஷ்யர்களுக்கும், தேவாமசம் பொருந்தியவர்களுக்கு மாத்திரம் தான் கொடுப்பார். இப்படி பட்ட அந்த தீர்தம் கூட ஜெயிலுக்கு கொண்ட வர கூடாது என்று சொன்ன போது..இதழோரம் ஒரு புன் முறுவலுடன் பத்திரக்கை கேமாரக்களுக்கு சொன்னார்..

“வினாச காலே விபரீத புத்தி”...

பள்ளி நாட்கள் –டமுக்கு டமுக்கு டம் , டமுக்கு டமுக்கு டம்...

தொடர் பதிவில் என்னை அழைத்த நண்பர் ’ஸ்ரீ’க்கு முதலில் நன்றி அப்புறம் இத்தனை நாள் பெரிய .......... மாதிரி எழுதாமல் சீன் போட்டதற்க்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு என் பள்ளி நாட்களை பற்றி ஆரம்பிக்கிறேன்.. கொசுவர்த்தி சுழல்கிறது...


பள்ளி நாட்கள் என்றவுடன் எதை எழுதுவது எதை விடுவது என்று உறுதியாக தெரியவில்லை...முதல் 7 ஆம் வகுப்பு வரை எனக்கு பள்ளி நாட்களை மறக்க முடியமல் செய்த் விஷயம் மொழிப்பாடம்.முதல் இரண்டு வகுப்பில் தெலுங்கு படித்தேன், அடுத்து ஒரு வகுப்பில் ஆங்கிலம் மட்டும் படித்தேன், பின்பு ஹிந்தி ஒரு வருடம் , ப்ரென்ச் ஒரு வருடம். இப்படி கண்டமேனிக்கு படித்ததில் 7ம் வகுப்பில் ஒரு விஜயதசமி நாளில் மணல் கொட்டி ‘அ’ என்ற வார்த்தையை எழுதி தமிழை இரண்டாம் பாடமாக எடுத்தேன்..இன்று வரை தமிழில் தடுகினந்தோம் போட இது ஒரு முக்கிய காரணம் (எப்படியாவது தமிழில் நன்றாக எழுத வேண்டும் என்று தான் நான் தொடர்ந்து முயர்ச்சி செய்து வருகிறேன், அதுவரைக்கும் கொஞ்சம் பொருத்துக்கொள்ளவும்).

நன்றாக படிக்கும் மாணவன் என்பதால், நான் முதலாம் வகுப்பும், நான்காம் வகுப்பும் படிக்காமலே அடுத்த வகுப்புகளுக்கு டபுள் பிரமோஷன் கொடுத்துவிட்டார்கள் அதனால் வகுப்புகளில் படு சுட்டியாக கேள்வி கேட்டு ஆர்பாட்டம் செய்வதில் மிக பிரபலம்..

ஒருத்தனுக்கு ’மெட்ராஸ் ஐ’ வந்துவிட்டால், அடுத்து அவன் கண்ணை உற்று பார்த்து வேண்டுமென்றே ’மெட்ராஸ் ஐ’ வரவைழைத்து கொண்டு பள்ளிக்கு மட்டம் போடுவது..லீவ் போடுவதற்கான காரணங்கள் தேடுவதில் பெரிய கேடிகள்.. விளையாட்டு நேரத்தில் விளையாடாமல், வெயிலில் உட்காருவது, வெங்காயத்தை அக்குள் நடுவில் வைத்து கொள்வது. பாம்பு, பேய் என அதை பார்த்தேன் இதை பார்த்தேன் என புருடா விட்டு ஜுரம் வந்தது போல் நடிப்பது என ஒரே கலட்டா தான்..இதுவரை தாத்தாபாட்டியை கொன்றதில்லை....

இதுவரை நான் வீட்டு படம் செய்ததேயில்லை, 3வது முதல் காலெஜ் வரை வீட்டுபாடம், அசைன்மெண்ட் என்று எதுக் கொடுத்தாலும் எழுதியதில்லை, பாடங்களுக்கு தனி நோட் போட்டு அதில் கேள்வி பதில்கள் எழுதியதில்லை, பரிட்சை பேப்பரில் சரியான விடையை எழுதியதில்லை ஆனால் ஒன்று பரிட்சை நேரத்தில் யாரவது காப்பியடித்தால் பார்த்துவிட்டு வாத்தியாரிடம் சொல்லிவிடுவேன்..

பள்ளி நாட்களில் புக் வைத்து அதில் கிரிக்கெட் விளையாடுவது , ஏதாவது வாத்தியார் ஒரே வார்த்தையை எத்தனை முறை சொல்லுகிறார் என எண்ணுவது, எல்லருடைய டிபன் பாக்ஸையும் காலி செய்வது, சண்டை போடுவது அன்றாட செயல்கள்..

ஒரு முறை என் கணக்கு வாத்தியார் எனக்கு நன்றாக புரிந்து தொலைத்த கணக்கை பாடம் நடுத்துகிறேன் என்று குழப்பி கொண்டிருந்தார், நான் கொஞ்சம் டென்ஷ்னாகி, எப்படி தான் நீங்கயெல்லம் எமெஸ்சி பாஸ் பண்ணிங்களோ என கேட்க, அது அவர் காதில் விழுந்துவிட்டது..

கோபமாக என்னை நோக்கி வந்த அவர் ”என்னடா சொன்ன?” என்று கேட்க..

“இல்ல சார், இப்பவே கணக்கெல்லாம் இவ்வளவு கஷ்ட்டமா இருக்கே, எம் எஸ் சிலயெல்லாம் இதவிட கஷ்ட்டமா இருக்குமே எப்படி படிச்சு பாஸ் பண்ணிங்க என டோன் மாத்தி சொல்ல”

அவர் நான் பண்ண டுபுரி தனம் புரியாமல் அறியா புள்ளையாக, சற்றே பெருமிதத்தோடு ”அது கஷ்ட்டம், நான் புரிஞ்சி படிச்சென்” என ஏதேதோ சொல்ல நான் எஸ்...

பள்ளிகூடம் பக்கத்தில் தியேட்டர், பசங்க சுவர் ஏறி குதிச்சி அந்த வாட்ச்மேனை கரக்ட் பண்ணி பிட்டு டைமல மட்டும் பிட்டு படம் பார்பானுங்க. ஒரு வாட்டி ஆர்வக்கோளாரில் அந்த சாகச செயலுக்கு நானும் சென்று , முதல் முதலில் பிட்டு படத்தை பார்த்து (அப்போ வயசுக்கு வராதா நான்..) குமட்டி வாந்தியெடுத்து, திருப்பியும் அந்த பசங்களையும் தியேட்டர் உள்ள சேர்க்கவெயில்லை.. (நான் எவ்வாளவு நல்லவன் பார்த்தீங்களா!) அன்னிக்கி பண்ண கலட்டால, முன்ன உட்கார்ந்திருந்த என் சையின்ச் வாத்தியார் எங்க கிட்ட வசமா மாட்டிகிட்டார்..

என் பள்ளி நாட்களை பற்றி தனி பதிவே போட வேண்டும் ஒன்றல்ல 100 பொறுமையா பார்க்கலாம்..

இந்த தொடர் பதிவுக்கு நான் அடுத்து அழைக்க போவது தண்டோரா.... தண்டோரா... தண்டோரா....

Monday, July 6, 2009

கிழக்கு பதிப்பக மொட்டை மாடியும், பதிவர்களும் - ஒரு குரங்கு கதையும்.

முதலில் குரங்கு கதை:

ஒரு மழை நாள். நமக்கு வாழ்கையில் கிடைக்கும் இலவச ’அட்வைஸ்’களை போல் மழை பொழிந்துக் கொண்டிருந்தது. 5 மணி நேரம் ஆகியும் மழை நிற்கவில்லை. அந்த அடை மழையில் நனைந்தபடி குரங்கு ஒன்று ஒரு மரத்தின் கிளையில் ஒதுங்கியது. மரத்தில் ஒரு குருவி கூடு, அந்த கூட்டில் இரண்டு குருவிகள். அந்த இதமான குளிரில் மழையை ரசித்தபடியிருந்தன. மறுபக்கம் குளிரில் நடுங்கியபடி மழையை வெறுத்து பார்த்துக்கொண்டிருந்த குரங்கு.வாழ்க்கை இப்படியான முரண்பாடுகள் நிறைந்தவொன்றுதான். ஒரே மழை குருவிக்கு இதமாகவும், குரங்குக்கு எரிச்சலாகவும்!..

குளிரில் நடுங்கியபடியிருக்கும் குரங்கை பார்த்து ஒரு வித பரிதாபத்துடன் ஒரு குருவி கேட்டது,

“ஏன் குரங்கண்ணா, கை இல்லாத நாங்க அழக இந்த மாதிரி ஒரு கூட்டை பிண்ணிக்கிட்டு, இந்த மழை காலத்தில ஒதுங்கி சந்தோஷமா இருக்கோம். உனக்கு இரண்டு கையிருக்கு, இத வச்சு ஒரு கூட கட்டிக்கிட்டு நீயும் சந்தோஷமா இருக்கலாம் இல்ல? “

குரங்கு எரிச்சலுடன் அந்த குருவியை பார்த்தது, “ ஏ, முட்டாள் குருவி, நீயெல்லாம் எனக்கு புத்தி சொல்லுகிறாயா? எனக்கு கூடு கட்ட தெரியாது, ஆனா அத பிக்க தெரியும்” என்று அந்த குருவி கூட்டை பிரித்துவிட்டது.

இப்பொழுது இத்தனை நாள் கஷ்ட்டபட்டு கட்டிய கூட்டையிழந்து மழையில் நனைந்தபடி, ஒன்றும் செய்யமுடியாமல் அந்த குருவிகள் ஒதுங்க ஒரு இடம் தேடிச் சென்றன.....


இப்பொழுது மொட்டை மாடி....

சாரு கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் வந்து பேசபோகிறார் என்று ஒரு அறிவிப்பு வந்தபோது தான் கிழக்கு பதிப்பக மொட்டை மாடி பற்றி தெரிந்தது, ஆனால் அன்று போகவில்லை.பின்பொரு நாள் ஞாநி மும்பை தாக்குதலை பற்றி பேச நான் அங்கு சென்றிருந்தேன்.

நல்ல காற்றோட்டம், மொட்டை மாடியில் சூடாக ஏதாவாது சாப்பிட்டுக்கொண்டு பேசுவது எனக்கு சின்ன வயதிலிருந்தே பிடித்த விஷயம். 9 வது வகுப்பு கோடை விடுமுறை நாட்களில் தினமும் எங்கள் வீட்டில் ஏதவாது செய்ய சொல்லி ஒரு 4 பேர் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அந்த சிற்றூண்டிகளை சாப்பிட்டபடி அரசியல் பேசுவோம்.அப்புறம் அதெல்லாம கலைந்துவிட்டது..

பல நாட்கள் கழித்து அந்த மாதிரி ஒன்றை தான் ஞாநியின் கூட்டத்தில் உணர்ந்தேன்.அடடா இது நல்லயிருகே!

பின்பு ஒரு பதிவர் சந்திப்பை ஜனவரி 25ம் தேதி மெரினாவில் வைக்க முயல, பாதுகாப்பு பிரச்சனை வரும் என்பதால் அவசரவசரமாக வேறு வழியின்றி கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் வைக்க வேண்டிய நிலை வந்தது .


பின்பு கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் அந்த பதிப்பகத்தார் நிறைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வந்தனர்,சில நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன் சிலதுக்கு செல்லவில்லை.அங்கு பல நேரம் நம்ம பதிவர்களை காண முடியும் அப்படியே நிகழச்சி முடிந்ததும் கொஞ்ச நேரம் பதிவர் நணபர்களுடன் பேசிவிட்டு கிளம்பிவிடுவேன்..


ஆனால், கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் நடத்தப்படும் பல நிகழ்ச்சிகளை வைத்து சென்னை பதிவர்களை மற்ற பதிவர்கள், பதிவுகளின் மூலம் விமர்சிக்க தொடங்கினார்கள், சற்றே குழப்பம்.இது என்ன கொடுமை, அவர்கள் ஏதோ நடத்துகிறார்கள் அது எனக்கு பிடிக்க நான் போகிறேன் இதில் யாருக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு கொண்ட போது.. ”பதிவரசியல், பதிவரசியல்” என்றார்கள்..

ஓஹோ, என்று நான் என் வேலையை பார்த்துகொண்டிருந்தால் நேற்று உலக பட திரையிடலை பற்றி எழுதிய பதிவில் எனக்கு ’பூணூல் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.....


நமக்கு பிடிக்கும் விஷயம் சென்னையில் நடந்தால் , ஓய்வாக இருக்கும் போது அங்கே செல்கிறோம்..இதுக்கும் நடத்துபவர்களை விமர்சனம் செய்தால் பதில் சொல்வது சொல்லாத்தும் அவர்கள் விருப்பம், அந்த பக்கம் போகிற என்னை ஏன் கலாய்க்கிறார்கள் ?

”பதிவரசியல், பதிவரசியல்”

எப்படியோ, நான் குறும்பட வட்டம் போகிறேன், கேணிக்கு போகிறேன்..அதுக்க என்ன சொல்ல போகிறார்களோ?.. இனி நிகைழ்ச்சியை நடத்துப்பவர்கள் தங்கள் என்ன ஜாதி என்று அழைப்பிதழில் சொல்லிவிட்டால் எங்களை மாதிரி ஆட்களுக்கு தேவலை..இல்லை என்றால் நிகழ்ச்சிக்கு போகிற என் நிலமை?


மேல சொன்ன கதைக்கும் பதிவுக்கும் நீங்களாக சம்பந்தம் ஏற்படுத்திக்கொண்டால் நான் பொறுப்பில்லை...

டிஸ்கி: அனனிய கமெண்ட் போட்டா யாருன்னு கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்கும் இணைய அறிவிஜீவிகளுக்கு: மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது, எனக்கு நீங்கள் அனனி, என்று கமெண்ட் போடுவதும், உங்கள் பெயருடன் கமண்ட் போடுவதும் ஒன்று தான்.. இணையத்தில் இருக்கும் இலவச சாப்ட்வேர்களை வைத்தி ஐபி கண்டுபிடிபவனல்ல நான்...எங்களுக்கு வேற வழியும் தெரியும் :)))) அட முட்டாளுங்களா?

Friday, July 3, 2009

சென்னை உலகப்படம் திரையிடல்: Rabbit proof Fence:: கிருமிகளான ’க்ரீமிகள்’.

மனுதர்மம் மனிதர்களை நான்கு பிரிவுகளாக பிரித்தது, சூத்திரர்களை காட்டிலும் ஒரு புது பிரிவை நவமனுக்கள் உருவாக்கினார்கள் ‘சண்டாளர்கள்’. பார்பன இனத்தை சேர்ந்த ஒருவருக்கும் சூத்திர இனத்தை சேர்ந்தவருக்கும் பிறக்கும் இனத்தை சண்டாளர்கள் என பிரித்துவைத்தனர். அவர்களை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர் அவர்களை தங்களுக்கு அடிமையாக்கிகொண்டனர்..

அதே ஆரியர்களின் இன்னொரு பிரிவான ஐரோபியர்கள் ஒரு படி மேலே போய் தாங்களின் ஆளுமை செய்யும் நாடுகளில் உள்ள கறுப்பினத்தவருக்கும் வெள்ளையின் கலப்பினால் பிறந்தவர்களை ‘க்ரீமிகள்‘ என்று ஒதுக்கி அவர்களை கொல்லவும் ஆணையிட்டிருந்தது அரசு. அதற்கு முதல் படியாக அப்படி பிறந்த குழந்தைகள் அனைவரையும் தங்கள் தாயிடமிருந்து பிரித்து தனி முகம்களுக்கு அனுப்பினர்.

அப்படி ஆஸ்திரிரேலியாவில் நடந்த க்ரீமிகள் ஒழிப்பு சம்வத்தை மையமாக கொண்ட படம் தான் Rabbit proof Fence:. கறுப்பின சிறுவர்கள் ‘க்ரீமிகள்’ என தங்கள் குடுபத்திடமிருந்து பிரிக்க அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி தங்கள் தாயை தேடி வருவது கதை.

பதிவர்களே தங்களுக்குள் திரையிட்டுக்கொள்ளும் ’உலக பட திரையிடல்’ பிரிவில் இந்த மாத முதல் ஞாயிறு கிழக்கு பதிப்பு மொட்டை மாடியில் இந்த படம் திரையிடப்படும். இந்த முறை அந்த முயற்சிக்காக பதிவரும் தோழருமான பைத்தியக்காரன் பட்ட அவதிகளை இங்கே படிக்கவும்.
http://naayakan.blogspot.com/2009/07/blog-post_03.html

சில மாதங்களுக்கு முன் சைமண்ட்ஸ் என்கிற ஆஸ்த்ரேலியா விரரை வாய் வலிக்க குரங்கு என்று கத்தியும், குரங்கை போல் ஜாடை செய்தும் இந்திய கிரிக்கெட்(ட) ரசிகர்கள் செய்த விஷமங்கள் நினைவிருக்கிறதா? சைமண்ட்ஸ் தப்பி பிழைத்த ‘க்ரீமி’ ஒருவருடைய பிள்ளை.நான் அன்று நிஜமாகவே இந்தியனாக வெட்கபட்டேன்...

ஒருவேளை இந்த படத்தை பார்த்தாலாவது நீஙகளும் அந்த சம்பவத்திற்க்கா வெட்கபடலாம்...
05 ஜூலை,2009- ஞாயிற்றுக் கிழமை.
எல்டாம்ஸ் ரோட் கிழக்கு மொட்டை மாடியில், மாலை 4.30 மணிக்கு.

Thursday, July 2, 2009

USE E-BOOKS and SAVE TREES

முரண்: மரங்களின் அழிவை பற்றி சொல்லுவது புத்தகங்கள்!.

இப்பொழுதெல்லாம் புத்தகங்களை தொட்டாலே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி. இன்று ஒரு அரசு அலுவலகம் சென்றிருந்தேன், அங்கு நீண்ட நேரம் காத்திருந்து, பின் ஒரு ஊழியர், தன் மேலலுவளரை சென்று பார்க்க சொன்னார். அவர் கை காட்டிய திசையில் பேப்பர் குப்பைகளுக்கிடையே மேளாலர் கோபமாக திட்டியபடி, சரியாக இருந்த என் கோப்பயும் ஒரு வித எரிச்சலுடன் கையெழுத்திட்டு வேலை முடித்தார். ஒரு 30 நிமிடம் கழித்து அந்த சிடு மூஞ்சி கேஸை டீ சாப்பிடம் இடத்தில் பார்த்த போது ஏதொச்சையாக பேசினார். நார்மலாக தான் இருந்தார், ’வேலை நேரத்தில் மட்டும் ஏன் கொஞ்சம் கோபமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘எனக்கு டஸ்ட் அலர்ஜி’ என்றார்.

’ஹாரிபாட்டர்’ புத்தகங்கள் அதிகளவில் விற்ற போது அந்த புத்தகத்தின் மீது எழுந்த சுவரிசியமான குற்றச்சாட்டு, ’ஹாரிபாட்டர்’ புத்தகங்களை அச்சடிக்க வெட்டபட்ட மரத்தின் எண்ணிக்கையை சுட்டிகாட்டி இயற்க்கை சீரழிவு என சொல்லியிருந்தார்கள். அப்பொழுது எனக்கது முட்டாள் தனமாக பட்டது.

இப்பொழுதெல்லாம் இந்த புத்தகங்கள், பேப்பர்கள் என அதற்க்காக வெட்டபடும் மரங்கள் பற்றியும் கவலை வருகிறது. இதில் நகைமுரண் இயற்க்கை சீரழிவை பற்றியும்,மரங்களின் தேவை பற்றியும் எழுதப்படும் கட்டுரைகளை சுமந்து வருவதும் புத்த்கங்களும், பேபர்களும் தான்.

வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தை இயற்க்கையின் எதிரி என்கிறோம், ஆனால் என்னை கேட்டால் சில தொழிற்நுட்பங்கள் கால மற்றத்தின் அவசியத்தில் இயற்க்கையை காப்பாற்ற பிறந்ததாக கூட இருக்கலாம் அல்லவா?.

என் மனதில் அந்த தூசிகளுக்கு நடுவே தட்டிய ஒரு சிறு பொறி “USE E-BOOKS, SAVE TREES” . நன்றாக பாருங்கள் இந்த முயற்ச்சி ஒரு சிறு அளவு பயன் தரக் கூடியது தான் இதுவே மொத்த பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கவில்லை. இதை பற்றி அனைத்து பதிபகங்களும் சிந்தித்து, மின்நூல்களை மக்களிடம் பிரபலபடுத்த வேண்டும்.குறந்தபட்ட்சம் ஒரு அஜெண்டாவவ்து அவர்களிடம் இருக்க வேண்டும்.

இனி யாரவது ஒருவர் மின்நூல்கள் புத்தகங்களை போல் அல்ல, புத்தகங்கள் தரும் ஒரு வித வாசனையை,வசதியை மின்நூல்கள் தருவதில்லை என்று கூறினால் அவர்களிடம் கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்.....

Wednesday, July 1, 2009

சாரு நிவேதா எனும் ’பரமார்த்த குருவும்’ அவரின் இணைய சிஷ்’யார்(?)’களும்

தெரிதா, ஒரு ’மறைபொருள் பயங்கரவாதி’
- பூக்கோ


(தான் எழுதும் எழுத்தில் பல ’மறைபொருள்களை’ வைத்திருப்பார். அதை பற்றி யாரவது எதிர்விணையாற்றினால், உடனே ’நான் அந்த பொருளில் எழுதவில்லை, நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டிருக்கிறீர்கள்’, என்று அவர்களை ’முட்டாள்’ என திட்டுவார். அதனால் அவர் ’தீவிரவாதி’).


சாரு நிவேதா என்னும் எழுத்தாளர் நாவல்களை படித்த போது உள்மனம் ஒன்றை திரும்ப திரும்ப சொன்னது ‘இவர் தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு ஏதோ புதிய முயற்சி செய்கிறார்” என்று அதனால் ஊந்தப்பட்டு அவரின் கட்டுரைகள், விமர்சனங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். பல விமர்சனங்கள் விமர்சனங்களை போல் இருந்தன.கட்டுரை என்ற நோக்கிலும் மிக கச்சிதமாகவும் பொருந்தின, எழுத்திலும் சோர்வு தட்டவில்லை - ஒரு 200 பக்க புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிடும் அளவு அருமையாக இருந்தது.அவரின் வாசகனானேன் - அவர் எழுதிய புத்த்கங்களை கண்மூடி வாங்கலாம் எனும் அளவிற்கு.

அத்துடன் நின்றிருக்கலாம், இணையம் அறிமுகமாகி பதிவுகள் படிக்க தொடங்கியிருந்த நேரம் அவரின் இணைய தளத்தை படிக்க தொடங்கினேன்......

சொந்த வாழ்க்கை:

பெரும்பாலும் பதிவுகளை இலக்கியமாக எடுத்துகொள்ள முடியாது, ஆனால் ஒரு எழுத்தாளர் எழுதுகிறார் எனும் போது நிச்சயமாக சாருவின் பல பதிவுகள் மிகுந்த தரத்தில் இருந்தன.யாரவது புதிதாக எழுத வேண்டுமென்றால் ‘சாருவின் இணையத்தை படியுங்கள்’ என்று பரிந்துரைக்கும் அளவிற்கு.

பெறும்பாலான அவரின் சொந்த வாழ்க்கையை பதிவிடுவார்; தன்னை பற்றிய சுயவிமர்சனத்தை முன்வைப்பார்.செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பார், அழுவார், கதறுவார், ஏங்குவார், மகிழ்வார். விளம்பரம் செய்வார், விமர்சன்ம் புரிவார், எதிர்விணையாற்றுவார், பல எதிர்வினைகளுக்கு புன்னகையுடன் பதிளளிப்பார். அவரின் பதிவுகளை படிக்கும் போது அவரின் குடும்ப உறுப்பினர்கள் நமக்கு நெருங்கிய சொந்தங்கள் போல் தெரியும்.அவரின் நண்பர்களை போல் நமக்கும் நட்புகிடைக்காத என நம்மை பொறாமைப்பட வைக்கும்.


அறிமுகங்கள்:

தன்னுடைய எழுத்துகளின் மூலம் தன் வாசகர்களுக்கு பல நல்ல இலக்கியத்தையும், நல்ல எழுத்தாளர்களையும், படைபாளிகளையும் அறிமுகம் செய்வார்.அத்துடன் நிற்க்காமல் அவர்களின் மிக முக்கிய படைப்புகளை பகிர்வார். ’என்ன மனுஷன்ப்பா இவர், எவ்வளாவு வாசித்திருக்கிறார்’ என்று பிரம்மிப்பு எழும், அத்ன் நடுவே தன்னுடைய எழுத்தின் காதலை தெரிவிபார். எழுத்து மாத்திரம் இருந்துவிட்டால் போதும் அவர் உயிர் வாழ என்பதை படிக்கும் போது அவரை பார்த்து காலில் தொட்டு கும்மிட தோன்றும்.காலில் தொட்டு கும்மிட்டு அவரின் சீடரானவர்களை எங்கும் பார்க்கலாம், முக்கியமாக இணையத்தில்.

ஜெயமோகன் VS சாரு நிவேதா

பொதுவாக நேர்மையாக விமர்சிக்கும் அனைவருக்கும் முதலில் கிடைப்பது திட்டுகள் தான். அதுவும் முற்போக்காக பேசும், இலக்கியங்களை முன் வைக்கும் சாருவுக்கு கிடைக்கும் எதிர்விணைகள் சகஜம் தான். ஆனால், அவரின் வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு முக்கியமான விஷயம் அவரும் ஜெயமோகனும் ஆற்றும் ‘இலக்கிய யுத்தம்’ அதை பெரும்பாலும் படிக்காமல் தவிர்த்துவிடுவது நல்லது. ஜெயமோகன் நல்லவர் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் ஒரு ’ஹிந்துத்வா’வாதி தன் நூலில் அதை அமைதியாக எழுதுவார். ஆனால் அவருக்கும் வாசகர்களும் ரசிகர்களும், சிஷ்யர்களும் இருந்து தொலைத்தனர். இணையத்தில் சாரு-ஜெமோ என இருவரும் ‘இலக்கிய யுத்தம்’ என்னும் பெயரில் எழுதிகொண்டிருந்த ‘மலக்காற்றை’ சுவாசிக்காமல் இணையத்தில் வாசிப்பவர்கள் தப்பிப்பதை கடினமாக்கியது அவரின் சிஷ்யபரமார்த்’மாக்கள்’ தான்.
சாருவும், ஜெமோவும் சொல்லிகொள்ளும்படியில்லை என்றாலும் தமிழில் தவிர்க்க முடியாத எழுத்தாளர்கள் எனபதை யாரும் மறுக்கயிலாது.ஆனால் அவர்களுக்குள் நடத்திக்கொண்ட ‘இலக்கிய யுத்தம்’ இருவரும் எழுத்தில் கொட்டிய ’மலம்’.அதை அனைத்தையும் பிரசாதமாக எடுத்துகொண்டது அவரின் சிஷ்யகோடிகளின் ஜென்மபலன்.அவர்கள் அதை உணவுடன் மற்ற அனைவருக்கும் வினியோகித்தது?

செலிபிரிட்டி:

சுஜாதா மறைந்த நாளிலிருந்து. சாருவின் பதிவுகள் மாற தொடங்கின, தன்னை எப்படியாவது அடுத்த சுஜதாவாக மாற்றும் முயற்சியில் இறங்கினார்.தன் வாழ்க்கை பாரதியருடையது போல் என்றார், தன் புத்த்கங்கள் ’ஓரன் பமுக்’குடையது போல் விற்பதில்லை என்று புழுங்கினார், தன்னை ’கலியுக சித்தர்’ என்றார், எழுத்துளக கடவுள் என்றார் போதும் போதும் என நாம் அவரின் பதிவுகளை பார்த்து முகம் சுழிக்க ‘நீ வக்கத்தவன் , என எழுத்தை மீண்டும் மீண்டும் வாசிக்கும் என் அடிமை நீ” என் வாசகனை பற்றிய அவரின் எண்ணம் மிக உயர்ந்த நிலைக்கு சென்றது.சிஷ்ய பரமார்த்மாக்கள் கன்னத்தில் போட்டு கொண்டனர்..

‘தான் அசைந்தால் அசயும் உலகமெல்லாம் ‘ என மிக நிச்சயமாக நமப தொடங்கினார், இப்பொதும் அவரின் சிஷ்ய கோடிகள் ‘ஆமாம் சாரு பகவானே” என்று கன்னத்தில் போட்டு கொண்டனர்.கடிதங்களில் ‘சாரு நீங்கள் கடவுள், உங்களின் நாமத்தை 108 முறை சொல்லுகிறேன், உங்களின் எழுத்தை தினமும் படித்து உங்களுக்கு துதி பாடுகிறேன்” என்று எழுதிவிடுவார்கள்.
(சாருவின் நாவல்களை விமர்சிப்பவர்கள் விட்டுவிடலாம், பிரச்சனையில்லை அது நம்பதகந்ததும் ஆனால் அவர் ஜெயமோகன் பற்றி ஆற்றும் எதிர்விணைகளை எல்லாம் இலக்கியம் என்னும் போது?)

முரண்பாடுகள்:

தன்னை பாரதியாருடன் ஒப்பிட்டுக்கொள்வார், பாரதியார் எப்படி நிற்பார் என்று யாரவது பார்க்கவேண்டுமானால், சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில், அமிர்-சசி இருவரிடம் இவர் நிற்க்கும் புகைபடங்களை பாருஙகள் (அவரின் சிஷ்யா கோடிகள் அந்த படத்தை வைத்து கும்மிடுவதும், அதில் இருந்து விபூதிவருவதும் வேறு விஷயம்).

தன்னை இப்படி பல பிரபலங்களுடன் ஒப்பிட்டுகொள்(ல்)வார். அத்ற்கு தான் தகுதியானவான் என்று அவர் நினைக்கலாம், அவரின் அந்த ஒப்பிடும் முறையும் தவறில்லை ஒரு வித நல்ல பழக்கம் தான்.
அவரகளுக்கு எல்லாம் கிடைக்கிறது எனகெல்லாம்கிடைக்கிறதா? என்று பொறுமாவர் தவறில்லை. அத்ற்கு பிரயசித்தமாக தன் வாசகர்களை ’தன் சிஷ்ய கோடிகள், தன் காலில் பூஜை செய்து அந்த புனித்நீரை குடிப்பது போல் குடியுங்கள்” அப்பொழுது தான் என் மனம் ஆரும் என்பார்.

விமர்சனங்கள்:

இவர் எழுதும் விமர்சனம் அதாவது அதன் கட்டமைப்பு ஒரு சரியான விமர்சன கட்டுரைகான உதாரணம்.ஆனால் ஒரு கட்டத்தில் அந்த கட்டுரைகளை இவர் தன்னை ‘மேதாவி’ என் காட்டிகொல்ல பயன்படுத்தினார்-தவறில்லை.தனக்கு பிடிக்காதவர்களை கட்டம் கட்ட உபயோகித்துகொள்வார்.நல்ல வாசகன் அதை விட்டுவிடுவான் அவரின் சிஷ்யாகோடிகள் அதையும் எடுத்துகொள்வார்கள்.

தொடர்ந்து அவரின் கட்டுரைகளை வாசிக்கும் அனைவருக்கும் அவரின் முரணபாடான கருத்துககளும், வாழ்க்கையும் புரியும். கருத்தளவில் மாற்றம் என்பது வேறு. நாட்கள் போகின்ற நாம் கற்றுகொள்கிறோம் அதனால் நம் பழைய கருத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது என்பது நியாயம்.

என கருத்திது, என்னை ஆதரிக்கும் நண்பனுக்கு இது பிடிக்காது,என் எழுத்தை அவன் பிரசுரித்து எனக்கு உதவி செய்வதாலும், எனக்கு உதவி செய்யும் பிற நணபர்களுக்கு பிடிக்காது அவர்களின் மனதை புண்படுத்தகூடது என அவர் தன் கருத்தை மாற்றிகொள்வது முரண்பாடு.அவரால் அரசியலை விமர்சிக்க முடியும் கலைஞரையல்ல(கனிமொழி!?) அவரால் ஈழமக்களுக்காக் கண்ணீர் விட முடியும், மனம் கொதிக்கும் என்ன போராட்ட முறையில் தான் அவர் தினமலர் சொல்லும் நிலையை எடுக்க வேண்டும்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உட்கார்ந்து கையில் ஒரு பாரின் சரக்குடன் ‘தாஸ்த்வொயிஸ்க்கி’யின் படைப்புகளை பேசும் இலக்கியவாதி. கார்ப்ரேட் கம்பெனியில் கம்யுனிஸ்ட்டாக வாழும் நவின காரல் மாக்ஸ்.

முரண்பாடான எழுத்தை கொண்ட கட்டுரைகளை வாசகர்கள் புறக்கனித்துவிடுவார்கள், மெல்ல. (என்ன கொடும சாரு சார் உங்களின் சிஷ்யா கோடிகள் கூட இப்பொழுதெல்லம் உங்களின் முரண்பாடுகளை பற்றி வருத்தபடுகிறார்கள்)

இவரை பொருத்த வரையில், இவரை பற்றிய நேர்மையான எதிர்விணைகளுக்கு இவர் பதிளளிக்க மாட்டார். அதற்கு நேரம் செலவிடுவதை விட ’என உயிரினும் மேலான எழுத்தை காதலிப்பதையும் , எழுதுவதையும் செய்வேன்’ என்பார்.என்ன தன் கருதிற்க்கு ஒத்துவரமாட்டார் என தெரிந்தும், எவ்வளாவு சொன்னாளும் திருந்தாத ஜெமோவின் ஒரு வரிக்கு, தன் பொன்னான நேரத்தில் இருந்து செலவு செய்து 100 பக்கம் எழுதுவார்.. பின்நவினத்துவம், பின்நவினத்துவம்....அவரின் சிஷ்ய கோடிகள் மீண்டும் கன்னத்தில் போட்டுகொல்வார்கள்.

தமிழ் எழுத்தாளர்கள்:

பெறும்பாலும் சாரு தமிழில் இலக்கியத்திய வாசிக்காததால் அவர் தமிழ் எழுத்தாளார்களை பற்றி எழுதிய அனைத்து விமர்சன கட்டுரைகளும் ‘மலம்’ அதை தேர்ந்த வாசகன் ஒதுக்கிவிடுவான்.சிஷ்ய கோடிகளுக்கு பிரசாதம், அவரை பிடிக்காதவர்களுக்கு பிராம்மாஸ்த்திரம்.

ஆனாலும் அவர் வாழும் பாரதியார், இப்பொதைய சுஜாதா, நாளைய பிரமிள்.......ஆமாம் தானே சாரு

டிஸ்கி :
இதுபோலெல்லாம் பிற எழுத்தாளார்கள் பற்றியும் தேவையான நேரத்தில் பார்க்கலாம்.

இது இலக்கிய விமர்சனமெல்லம் இல்லை, காரணம் அதையெழுத எனக்கு தகுதியில்லை.

இது சாரு எனும் தனிநபர் மீதான தாக்குதல் இல்லை. எதுக்கு வம்பு இவர் ஜெமோவை பற்றி எழுதிய தனிநபர் தாக்குதளுக்கு தணடனை கொடுக்காத இந்திய சட்டம். இவர் மீது தனி நபர் தாக்குதல் தொடுத்த பைத்தியகாரனுக்கு த்ண்டனை கொடுக்குமாம்.சட்டம் கூட சாருவை போல் தான் போல, முரண்பாடானது.?

Tuesday, June 30, 2009

நம்புங்கள் :இந்தியாவை பிரிட்டீஷ் அடிமைப்படுத்த காரணம் ’கடுகு’ !?

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், தேசிய தலைவர்கள்,தியாகிகள், ரத்தம், பிரிட்டிஷ் ஏகாதிப்பத்திய எதிர்ப்பு, அஹிம்சை இவையெல்லாம் தற்கால இளைய சமுதாயத்திற்கு தெரிந்த நம் முன்னோர்களின் வரலாறு (இதில் கொடுமை திராவிடனின் வரலாறும் இது தான்!?).சரி நம் பிரச்சனை அதுவல்ல, இந்தளவிற்கு, இந்தியாவின் வரலாற்றில் பெறும் பங்கு வகிக்கும் பிரிட்டிஷ் காலனியாதிக்கம், இந்தியாவில் வரக் காரணம் ‘கடுகு’ (சமையற்கட்டு கடுகேதான்).

அதாகபட்டது, 16 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்களின் உணவில் ‘கடுகு மற்றும் இதர வாசணை பொருட்கள் அவர்கள் வாழ்க்கையில் பெறும் பங்குவகித்தன.ஆனால் அந்த பொருட்களை பெரும்பாலும் அவர்கள் டச்சுகளிடம் இருந்து தான் வாங்கினார்கள் (டச்சுக்கள் கடல் வணிகம் செய்வதில் அப்பொழுது முக்கிய பங்கு வகித்தனர்).




திடிரென ஒரு நாள் டச்சுக்கள் கடுகின் விலையை உயர்த்திவிட்டனர், இதை கேட்டதும் இங்கிலாந்து ஆடிப்போய்விட்டது, அதிர்ச்சியடந்தது.இந்தியாவில் இருந்து சரக்கை கொண்டு வந்து விற்பதற்கு, அவர்கள் ஏன் இப்படி கொள்ளை விலை வைக்க வேண்டும், இது பகற்கொள்ளை.உடனடியாக சில வணிகர்கள் ஒன்றாக சேர்ந்து ‘கிழகிந்திய கம்பெனி’ என்று ஒன்றை உருவாக்கி, இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதி வேண்டி ராணியை நாடினார்கள்.ராணி அனுமதித்தார் ஒரு நிபந்தனையோடு, “வியாபரம் மட்டும் செய்யுங்கள் , நாட்டை பிடிக்காதீர்கள்’, அவர்களும் அந்த நிபந்த்னைக்கு உறுதியளித்துவிட்டு இந்தியா வந்தால்!

வளமிக்க இந்திய நாட்டை பார்ததும் இங்கிலாந்து ராணியெல்லாம் ஒரு கிராமத்தின் நிர்வாகி போல் தெரிந்தார். மெதுவாக அரசியலில் அந்த நிறுவனம் நுழைந்தது.அடுத்து நடந்த வரலாற்றையெல்லாம் 5 மார்க் கேள்விக்கு படித்திருப்போம்.சிதறி கிடந்த ராஜாக்களை எளிதாக வென்று இந்தியாவையே பிடித்துவிட்டார்கள்.

கிழகிந்திய கம்பெனியில் கணக்கர், குமாஸ்த்தா, ஆபிஸர்யெல்லாம் இந்தியாவின் கவர்னர், கலக்ட்டர் என தாறுமாறான பதவிகளை பெற்று இந்தியார்களின் முதுகில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தனர்.உதரணம் கிழக்கிந்திய கம்பெனி சார்பாக வியாபாரம் செய்ய ஜேம்ஸ் என்பவர் முதன் முதலில் மொகாலிய மன்னர் ஜெஹாங்கீரை சந்தித்தபோது, மன்னர் ஜேம்ஸிர்க்கு ஒரு அழகான இந்திய கிறிஸ்த்துவ பெண்ணை பரிசாக அளித்திருக்கிறார்.

அப்புறமென்ன இங்கிலாந்தில் செல்வம் தேம்ஸ் நதிப்போல் பெருக்கெடுத்து ஓட, ’இந்தியாவை ஆளுங்கள்’ என்பது அரசின் முக்கிய அஜெண்டாவாகிவிட்டது.



பின்பு 1900களில் இந்தியா என்னும் நாட்டை ஆளவே இங்கிலாந்தை கடவுள் படைத்தார் அவர்களுக்கு சுயாட்சி கொடுத்தால் ஒரு மண்ணும் செய்ய தெரியாது என்று கவிஞர் ரூடர்யார்ட் கிப்ளிங்கும், பிரதமர் சர்ச்சிலும் திடமாக நம்பினார்கள்.

ஏதோ கடவுள் புண்ணியம் ஹிட்லார் உலகை ஆள இராண்டாம் உலக யுத்தத்தை தொடங்க அதில் நிறைய இங்கிலாந்துகாரர்கள் சாக, வேறு வழியில்லாமல் ஹிட்லர் ரூபத்தில் நமக்கு சுத்ந்திரம் கிடைத்து.




கடுகுகாள் வந்த பிரச்சனை நல்லபடியாக இராண்டாம் உலக போரால் முடிந்தது.