மரங்களின் நடுவே அமைதியான சூழலில் அந்த ஆசிரமம் அமைந்திருந்தது.ஆசிரமத்தில் மகா சுத்தம், ஆச்சாரம் பார்ப்பார்கள், மற்ற ஆசிரமங்களை விட நிச்சயம் இது வித்தியாசமான ஆசிரமம்.மற்ற ஆசிரமங்களில் உள்ளே நூழையும் போது செருப்பை கைட்டிவிட்டு வர சொல்லுவார்கள் ஆனால் இங்கு செருப்பு மட்டுமல்ல துணியையும் கழட்டி விட்டு வர சொல்லுவார்கள்.அப்படியே துணி இருந்தாலும் ஆசிரமத்தை விட்டு வரும் போது நிச்சயம் கோமனம் உருவி அனுபினால் நீங்கள் சந்தோஷம் பட்டுகொள்ளலாம், ஏனென்றால் பொதுவாக அவர்கள் உருவுவது கிட்னியை.
ஆசைபடதே என்று சொல்லும் சாமியர்களின் நடுவில் அத்தனைக்கும் ஆசைபடு என்று சொன்னவர் நம்ம சாமியார். இவரை போலி சாமியார் என்று நீங்கள் கூறினாலும் அவர் புன்முறுவலுடன் உங்களூக்கு ஒரு குத்தாட்டம் போட்டு ஆசிர்வாதம் செய்வார்.அவருக்கு வயது எப்படியும் 1500 வருடங்கள், 1600 என்று பக்த கோடிகள் சொன்னாலும் அவரின் உத்தம காரியதரிசியோ புன் முறுவலுடன் சொல்வது இவர் இமயமலையில் உள்ள பாபாவுக்கே பால் கொடுத்தவர் என்று..அப்ப எப்படியும் 2000 வருடங்களுக்கு மேல்....
ஆசிரமத்தில் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து மோட்சம் பெற தயாராக வேண்டும்.இங்கு வரும் பக்தர்கள் எந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்கள் என்று உங்களுக்கு சொன்னால் தெரியாது அதை புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை..ஒரு நிமிடம்
’ஓம் கிரீம் ஐஸ்கீரிம்,சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நித்யானந்த பகவான் ஜெகத்குரு ஜட்டியே நம்ஹா..’ இது தான் சுவாமியை அடைய மந்திரம்...
உங்களுக்கு கொஞ்சம் புராணம் சொல்லுகிறேன், ஆழ்வார்கள், நாயன்மார்கள் சதா சர்வ காலமும் கடவுளை நினைத்து பல ஜென்மங்கள் எடுத்து கிடைத்த மோட்சத்தை (திரையரங்கையல்ல), முக்தியை நம்ம குரு வெறும் 2500 ரூபாய் பணத்தாலும் சில மணிநேரம் பூஜையிலும் கொடுத்துவிடுவார்..
ஏதோ கடைக்கு சென்று மிக்சர் வாங்குவது போல் இங்கு வந்து மோட்சத்தை வாங்கி போனவர்கள் ஆயிரமாயிரம் .. ஆனால் ஒரு விஷயம் யாரும் சுவாமிஜி முன்னால் அல்லது நேருக்கு நேரோ உட்கார கூடாது.. நாட்டின் பிரதமரே சுமாஜியின் காலடியில் வாய் மேல் கைவைத்து உட்கார்ந்த காட்சியை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்தவர்கள் பலர்.
இந்த சாமியார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானல், சுவாமிஜி சாதராண மானிட பிறவியாக தான் அவதரித்தார், அப்படி ஒரு நால் காலட நடந்து சென்ற போது, ஒரு தெய்வீக குரல், அட நம்ம பாபா.
‘என்ன உன் கடமையை செய்யாமல் சுற்றிகொண்டிருக்கிறாய்’
என்று கேட்கவே அவரின் முன் ஜன்மம் நினைவுக்கு வந்தது. அவர் இதே பாபாவால் முக்தியை பெற்றவர் அதை அனைவருக்கும் அளிக்கவே இவர் அவதரித்திருக்கிறார் என்ற உண்மையை பாபாவே நேரில் வந்து நியாபக படுத்தவே சுமார் 1500 வருடஙக்ளுக்கு முன் இந்த ஆசிரமத்தை வெறும் 2 தங்க காசுகள் (அப்பொது 100 ரூபாய்) முதலீட்டில் தொடங்கினார் இன்று வளர்ந்து உலகம் முழுக்க கிளைகள் பரப்பி கோடிகணக்கில் பணம் கொண்ட ஆசிரமமாக வளர்ந்திருக்கிறது
அதன் பின் சுவாமி தன் இயற்பெயரை மாற்றி சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பகவான் ஜெகத்குரு ஜட்டி தேவ் பாபா சிஷ்யானந்தா என மாற்றிகொண்டார். இவர் முதல் நோக்கமே மக்களுக்கு எப்படி வாழுவது என கற்று கொடுப்பது தான் குறிப்பாக இளம் பெண்களுக்கு...
இவர் பேசாதவர்களை பேச வைக்கும் சாதரண சாமி இல்லை பேசுபவர்களை பேசாமல் செய்யும் அசாத’ரண’ குரு. வாயில் இருந்து லிங்கம் எடுபதில்லை, புல் போதையில் ஒருமுறை வாந்தியெடுத்தார் என்பது வேறு விசயம் என்றாலும் இவர் தன் முழு சக்தியையும் உபயோகித்து வாயிலிருந்து சின்ன பாலாடையில் ஆரம்பித்து மக்களுக்கு உபயோகம் கொடுக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வரை எடுத்து கொடுத்திருக்கிறார்..
ஒரு முறை ஒரு சிஷ்யர், ”சுவாமி, நான் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?” என் கேட்டபோது..
“எப்போதும் சந்தோஷமாகவே இரு” என்று சொன்னதும் இப்படி சாமியார் ஜென், சூபி தத்துவத்தை துப்பிய அந்த நொடியை நினைத்த மாத்திரத்தில் அந்த பக்தர் சுவமிஜியிடமே சென்று சேர்ந்தார்.
ஏழைகள் இருக்கும் வரை தான் பணக்காரன் என்பவன் தனித்து தெரிவான் அதனால் சம உலகம் ஏற்பட அனைவரும் பணகாரர்கள ஆக வேண்டும் என சொல்ல பல கம்யூனிஸ்ட் தொண்டர்களே சோஷலிசம் பேசிய நவின மார்க்ஸ் இவர், என ஆசிரமத்தில் சேர இவருக்கு ’மார்கஸானந்த’ எனும் இன்னொரு பெயரும் உள்ளது.
இவர் நமகருளியிருக்கும் நவின யோகவும், தியானமும் மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து முக்தி பெற இவரது உழைப்பும், தொண்டும் கொண்டு இவர் இன்னொரு 2000 ஆண்டுகள் வாழ்ந்து நம் சந்ததியினருக்கும் உதவ வேண்டும் என பக்தர்கள் நினைதிருந்த நேரத்தில் அவர் செய்த கொலைகளுக்கு (இது மூடர்களின் பாஷையில்) அவர் பாஷையில் கொடுத்த முக்திகளுக்காக அவரை போலிஸ் கைது செய்தது..
சுவாமிக்கு இந்த உலகமே ஒரு வீடுதான் அவருக்கு எல்லாம் சமம். சுகம்-துக்கம், ஆசிரமம் ஜெயில்,ஆனால் அவ்ரை இப்படி கைது செய்ததை விட அவர் ஜெயிலுக்கு பூஜைகள் செய்ய தீர்தத்தை எடுத்து செல்ல கூடாது என சொல்லிய பொது தான் அவ்ருக்கு இந்த உலகம் அழிவை நோக்கி போய் கொண்டிருப்பது ஞானகண்ணுக்கு தெரிந்தது..
அந்த தீர்தம் செய்யும் முறையே அலாதியானது.. உலகின் மூன்று பாகங்களை சூழ்ந்துள்ள கடலின் உதவியுடன் கிடைக்கும் அமுதம் அது.. ஒரு புனிதமான கடற்கரையில் ப்ல பூஜைகள் செய்து அக்னிபகவான் துணையுடன் ஒரு பானையில் நிறைய தன்ணிர் ஊற்றபட்டு போடபடும் அண்ணம் (அண்னபூரினியை வழிபட்டு) ஒரு பத்தடி குழிக்குள் புதைக்கபட்டு இரண்டு மண்டல காலங்கள் (ஒரு மண்டலம் 48 நாட்கள்) பின் எடுக்கபட்ட போது ஒரு வித வாசனை வந்தாலும் அது தேவபானம், புனித தீர்தம். அதை சாமி தேர்ந்த சிஷ்யர்களுக்கும், தேவாமசம் பொருந்தியவர்களுக்கு மாத்திரம் தான் கொடுப்பார். இப்படி பட்ட அந்த தீர்தம் கூட ஜெயிலுக்கு கொண்ட வர கூடாது என்று சொன்ன போது..இதழோரம் ஒரு புன் முறுவலுடன் பத்திரக்கை கேமாரக்களுக்கு சொன்னார்..
“வினாச காலே விபரீத புத்தி”...
ஆசைபடதே என்று சொல்லும் சாமியர்களின் நடுவில் அத்தனைக்கும் ஆசைபடு என்று சொன்னவர் நம்ம சாமியார். இவரை போலி சாமியார் என்று நீங்கள் கூறினாலும் அவர் புன்முறுவலுடன் உங்களூக்கு ஒரு குத்தாட்டம் போட்டு ஆசிர்வாதம் செய்வார்.அவருக்கு வயது எப்படியும் 1500 வருடங்கள், 1600 என்று பக்த கோடிகள் சொன்னாலும் அவரின் உத்தம காரியதரிசியோ புன் முறுவலுடன் சொல்வது இவர் இமயமலையில் உள்ள பாபாவுக்கே பால் கொடுத்தவர் என்று..அப்ப எப்படியும் 2000 வருடங்களுக்கு மேல்....
ஆசிரமத்தில் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து மோட்சம் பெற தயாராக வேண்டும்.இங்கு வரும் பக்தர்கள் எந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்கள் என்று உங்களுக்கு சொன்னால் தெரியாது அதை புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை..ஒரு நிமிடம்
’ஓம் கிரீம் ஐஸ்கீரிம்,சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நித்யானந்த பகவான் ஜெகத்குரு ஜட்டியே நம்ஹா..’ இது தான் சுவாமியை அடைய மந்திரம்...
உங்களுக்கு கொஞ்சம் புராணம் சொல்லுகிறேன், ஆழ்வார்கள், நாயன்மார்கள் சதா சர்வ காலமும் கடவுளை நினைத்து பல ஜென்மங்கள் எடுத்து கிடைத்த மோட்சத்தை (திரையரங்கையல்ல), முக்தியை நம்ம குரு வெறும் 2500 ரூபாய் பணத்தாலும் சில மணிநேரம் பூஜையிலும் கொடுத்துவிடுவார்..
ஏதோ கடைக்கு சென்று மிக்சர் வாங்குவது போல் இங்கு வந்து மோட்சத்தை வாங்கி போனவர்கள் ஆயிரமாயிரம் .. ஆனால் ஒரு விஷயம் யாரும் சுவாமிஜி முன்னால் அல்லது நேருக்கு நேரோ உட்கார கூடாது.. நாட்டின் பிரதமரே சுமாஜியின் காலடியில் வாய் மேல் கைவைத்து உட்கார்ந்த காட்சியை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்தவர்கள் பலர்.
இந்த சாமியார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானல், சுவாமிஜி சாதராண மானிட பிறவியாக தான் அவதரித்தார், அப்படி ஒரு நால் காலட நடந்து சென்ற போது, ஒரு தெய்வீக குரல், அட நம்ம பாபா.
‘என்ன உன் கடமையை செய்யாமல் சுற்றிகொண்டிருக்கிறாய்’
என்று கேட்கவே அவரின் முன் ஜன்மம் நினைவுக்கு வந்தது. அவர் இதே பாபாவால் முக்தியை பெற்றவர் அதை அனைவருக்கும் அளிக்கவே இவர் அவதரித்திருக்கிறார் என்ற உண்மையை பாபாவே நேரில் வந்து நியாபக படுத்தவே சுமார் 1500 வருடஙக்ளுக்கு முன் இந்த ஆசிரமத்தை வெறும் 2 தங்க காசுகள் (அப்பொது 100 ரூபாய்) முதலீட்டில் தொடங்கினார் இன்று வளர்ந்து உலகம் முழுக்க கிளைகள் பரப்பி கோடிகணக்கில் பணம் கொண்ட ஆசிரமமாக வளர்ந்திருக்கிறது
அதன் பின் சுவாமி தன் இயற்பெயரை மாற்றி சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பகவான் ஜெகத்குரு ஜட்டி தேவ் பாபா சிஷ்யானந்தா என மாற்றிகொண்டார். இவர் முதல் நோக்கமே மக்களுக்கு எப்படி வாழுவது என கற்று கொடுப்பது தான் குறிப்பாக இளம் பெண்களுக்கு...
இவர் பேசாதவர்களை பேச வைக்கும் சாதரண சாமி இல்லை பேசுபவர்களை பேசாமல் செய்யும் அசாத’ரண’ குரு. வாயில் இருந்து லிங்கம் எடுபதில்லை, புல் போதையில் ஒருமுறை வாந்தியெடுத்தார் என்பது வேறு விசயம் என்றாலும் இவர் தன் முழு சக்தியையும் உபயோகித்து வாயிலிருந்து சின்ன பாலாடையில் ஆரம்பித்து மக்களுக்கு உபயோகம் கொடுக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வரை எடுத்து கொடுத்திருக்கிறார்..
ஒரு முறை ஒரு சிஷ்யர், ”சுவாமி, நான் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?” என் கேட்டபோது..
“எப்போதும் சந்தோஷமாகவே இரு” என்று சொன்னதும் இப்படி சாமியார் ஜென், சூபி தத்துவத்தை துப்பிய அந்த நொடியை நினைத்த மாத்திரத்தில் அந்த பக்தர் சுவமிஜியிடமே சென்று சேர்ந்தார்.
ஏழைகள் இருக்கும் வரை தான் பணக்காரன் என்பவன் தனித்து தெரிவான் அதனால் சம உலகம் ஏற்பட அனைவரும் பணகாரர்கள ஆக வேண்டும் என சொல்ல பல கம்யூனிஸ்ட் தொண்டர்களே சோஷலிசம் பேசிய நவின மார்க்ஸ் இவர், என ஆசிரமத்தில் சேர இவருக்கு ’மார்கஸானந்த’ எனும் இன்னொரு பெயரும் உள்ளது.
இவர் நமகருளியிருக்கும் நவின யோகவும், தியானமும் மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து முக்தி பெற இவரது உழைப்பும், தொண்டும் கொண்டு இவர் இன்னொரு 2000 ஆண்டுகள் வாழ்ந்து நம் சந்ததியினருக்கும் உதவ வேண்டும் என பக்தர்கள் நினைதிருந்த நேரத்தில் அவர் செய்த கொலைகளுக்கு (இது மூடர்களின் பாஷையில்) அவர் பாஷையில் கொடுத்த முக்திகளுக்காக அவரை போலிஸ் கைது செய்தது..
சுவாமிக்கு இந்த உலகமே ஒரு வீடுதான் அவருக்கு எல்லாம் சமம். சுகம்-துக்கம், ஆசிரமம் ஜெயில்,ஆனால் அவ்ரை இப்படி கைது செய்ததை விட அவர் ஜெயிலுக்கு பூஜைகள் செய்ய தீர்தத்தை எடுத்து செல்ல கூடாது என சொல்லிய பொது தான் அவ்ருக்கு இந்த உலகம் அழிவை நோக்கி போய் கொண்டிருப்பது ஞானகண்ணுக்கு தெரிந்தது..
அந்த தீர்தம் செய்யும் முறையே அலாதியானது.. உலகின் மூன்று பாகங்களை சூழ்ந்துள்ள கடலின் உதவியுடன் கிடைக்கும் அமுதம் அது.. ஒரு புனிதமான கடற்கரையில் ப்ல பூஜைகள் செய்து அக்னிபகவான் துணையுடன் ஒரு பானையில் நிறைய தன்ணிர் ஊற்றபட்டு போடபடும் அண்ணம் (அண்னபூரினியை வழிபட்டு) ஒரு பத்தடி குழிக்குள் புதைக்கபட்டு இரண்டு மண்டல காலங்கள் (ஒரு மண்டலம் 48 நாட்கள்) பின் எடுக்கபட்ட போது ஒரு வித வாசனை வந்தாலும் அது தேவபானம், புனித தீர்தம். அதை சாமி தேர்ந்த சிஷ்யர்களுக்கும், தேவாமசம் பொருந்தியவர்களுக்கு மாத்திரம் தான் கொடுப்பார். இப்படி பட்ட அந்த தீர்தம் கூட ஜெயிலுக்கு கொண்ட வர கூடாது என்று சொன்ன போது..இதழோரம் ஒரு புன் முறுவலுடன் பத்திரக்கை கேமாரக்களுக்கு சொன்னார்..
“வினாச காலே விபரீத புத்தி”...





