
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனிடம் தோல்வியடையும் சோழ அரசு, பாண்டியர்களின் குலதெய்வ சிலையை எடுத்துக்கொண்டு, சோழ இளவரசனையும் பத்திரமாக இன்றைய வியட்நாமிற்கு நாடு கடத்தி விடுகிறாகள். இன்றுவரை அவர்களை தேடி செல்லும் யாரும் திரும்புவதில்லை.இன்றைய மத்திய அரசு, ரீமா சென் தலமையில் ஒரு குழுவை அனுப்பி அந்த சோழர்களை பற்றி தகவல் திரட்ட சொல்கிறது. குழுவுகவில் ஆராய்ச்சிக்கு உதவியாக ஆண்ட்ரியா, கூலியாட்கள் குழுவின் லீடராக கார்த்தி, பாதுகாப்பு படை தளபதியாக அழகம் பெருமாளும் செல்கிறார்கள்.
பல தடைகளுக்கு பின் அங்கு சென்றால், சோழர்கள் இனம் இன்னும் சோழ மண்டலத்திலிருந்து தகவலுக்காக காலம் காலமாக காத்திருக்கின்றனர். ரீமா சென்னும் பழைய பாண்டிய வம்சாவெளியை சார்ந்தவர், சோழர்களை அழிக்க முயல்கிறார், கார்த்தி சோழர்களுக்கு உதவி புரிய இறுதியில் என்னவாகுகிறது என்பது தான் கதை.
கதையின் முதல் காட்சியில் இன்றைய தஞ்சையில் ஒரு தெருக்கூத்து காட்சியுடன் துவங்குகிறது -க்ளாசிக். தமிழ் சினிமாவிற்கு புதுமையான தைரியமான கதாபாத்திரங்களில் இரண்டு பெண்கள். வெற்று உதார்விட்டு எதற்கும் பயப்படும் கதாநாயகன். காடுகளில் பயணம், ஓலைச்சுவடி , ஆபத்துக்கள் அதை கடப்பது என முதல் பாதி சரியான ஜாலி, சுறுசுறு, வேகம்.
நிற்க. அதன்பின் கதை அதன்போக்கில் போகிறது, ஒரு நல்ல திரைக்கதைக்கு அது சரியானதில்லை. முதல் பாதியில் வரும் திரல்லர் காமெடி வகை ஒரு வித மனநிலையை உருவாக்கிவிட்டபின் திடிர் அந்தர் பல்டியாக துரோகம், பகை, அனுமாஷ்ய சக்திகள், அடிமை கொடுமைகள், என சம்பந்தமே இல்லாமல் இன்னொரு திசையில் திரைக்கதை பயணிக்கிறது சாதரண ரசிகனுக்கு இதனால் ஏமாற்றமே மிஞ்சும்.
முதல் காட்சியில் சோழ இளவரசன் தப்பிப்பதையே ஒரு படமாக எடுக்கலாம். சோழர்களை தேடிச் செல்லும் குழு என்பது இன்னொரு வகை படம். மண்ணை தீண்ட துடிக்கும் இனமக்களின் ஏக்கமும் அதன் தொடர்ச்சியான போரும் ஒரு வகை படம், என இந்த திரைக்கதை அழகாக தொடர் சினிமாவாக எடுத்திருக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றாக சொல்ல போய் அது எங்கோ போய்விட்டது.ஆயாசமே மிஞ்சுகிறது.
Child Abuse என்கிற ஒரு விடயத்தை காதல் கொண்டேன் படத்தில் அமைதியாக சொல்ல்விட்டு செல்வது போல், இந்த படத்தில், துரோகம் , போர் கொடுமைகள் , அதிகார மனோபாவத்தின் மோசமான முகத்தையும் அழகாக பதிவு செய்திருக்கிறார்..
போரில் தோற்று அடிமையாக சிக்கிகொள்ளும் பெண்களின் நிலை என்னவென்று பதிவு செய்திருக்கிறார். பாராட்டியே தீர வேண்டும்.
தொழிட்நுட்பம், மேக்கிங் என பல வேலைகளில் தரம் மிளிருகிறது. கேரக்ட்ரைசேஷ்ன் சொல்ல வேண்டிய அவசியமைல்லை அக்மார்க் செல்வா டச். கார்த்தி பருத்திவிரனை நினைவுக்கொள்ள செய்தாலும் இதில் கலாய்த்திருக்கிறார். கார்த்தி மேல் இன்னும் கொஞ்சம் மதிப்பு கூடுகிறது, நல்ல நடிகர்..
பாடல்களை கட் செய்துவிட்டு ஆல்பம் போல் போட்டிருக்க வேண்டும், பாடல்கள் தேவையற்றது, பின்னனி இசை அருமை. இன்னும் கொஞ்சம் திட்டமிட்டிருந்தால் அருமையாக வந்திருக்கும்..
வெகுமக்கள் பார்வையில் படம் சுமார், என பார்வையில் படம் சூப்பர்... இல்லை இல்லை “THE BEST”.







